ஆப்நகரம்

ஜி.எஸ்.எல்.வி மார்க்-3 ராக்கெட் கவுன்ட் டவுன் துவங்கியது

நாளை விண்ணில் ஏவப்பட உள்ள ஜிஎஸ்எல்வி எம்கே 3 டி1 ராக்கெட்டின் கவுண்ட் டவுன் இன்று மாலை துவங்கியது.

TNN 4 Jun 2017, 4:19 pm
நாளை விண்ணில் ஏவப்பட உள்ள ஜிஎஸ்எல்வி எம்கே 3 டி1 ராக்கெட்டின் கவுண்ட் டவுன் இன்று மாலை துவங்கியது.
Samayam Tamil gsat 19 mission countdown starts
ஜி.எஸ்.எல்.வி மார்க்-3 ராக்கெட் கவுன்ட் டவுன் துவங்கியது


இந்திய ராக்கெட் வரலாற்றில் மிக அதிகளவு எடையை சுமந்து விண்ணில் பாயும் ஏவுகணை என்ற பெருமையை ஜிஎஸ்எல்வி எம்கே 3 டி1 ராக்கெட் பெற உள்ளது.பல்வேறு தொழில்நுட்ப சேவைகளுக்காக இந்த ராக்கெட் ஏவப்பட உள்ளது. இதற்கான 25 மணிநேர கவுன்ட் டவுன் இன்று மாலை 3.58 மணிக்கு துவங்கியுள்ளது

இதன்படி, வரும் 5ஆம் தேதி மாலை 5.28 மணிக்கு இந்த ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்படுவதும் குறிப்பிடத்தக்கது. இந்த ராக்கெட் ஜிசாட் 19 என்ற 3136 கிலோ எடை கொண்ட இணைய தொலைத்தொடர்பு செயற்கைகோளை தாங்கிச் செல்ல உள்ளது. இதன் மூலம் இந்தியாவின் இணையதள வேகத்தையும் மிக அதிக அளவில் உயர்த்துவதுடன், விண்ணிற்கு மனிதர்களையும் அனுப்ப முடியும். இந்த ராக்கெட்டானது இந்திய தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது,

gslv mk iii-d1/gsat-19 mission countdown starts

அடுத்த செய்தி