ஆப்நகரம்

வெற்றிகரமாக ஜிஎஸ் எல்வி எம்கே 3 டி1 செயற்கைகோள் விண்ணுக்கு அனுப்பியது இஸ்ரோ!

இந்திய ராக்கெட் வரலாற்றில் மிக அதிகளவு எடையை சுமந்து விண்ணில் பாயும் ஏவுகணை என்ற பெருமையை ஜிஎஸ்எல்வி எம்கே 3 டி1 ராக்கெட் பெறற்றுள்ளது.

TOI Tech 5 Jun 2017, 5:58 pm
ஸ்ரீஹரிகோட்டா : இந்திய ராக்கெட் வரலாற்றில் மிக அதிகளவு எடையை சுமந்து விண்ணில் பாயும் ஏவுகணை என்ற பெருமையை ஜிஎஸ்எல்வி எம்கே 3 டி1 ராக்கெட் பெறற்றுள்ளது.
Samayam Tamil gslv mk3 launched successfully by isro
வெற்றிகரமாக ஜிஎஸ் எல்வி எம்கே 3 டி1 செயற்கைகோள் விண்ணுக்கு அனுப்பியது இஸ்ரோ!


பல்வேறு தொழில்நுட்ப சேவைகளுக்காக (முக்கியமாக தகவல் தொடர்புக்கு) இந்த ராக்கெட் ஏவப்பட உள்ளது. இதற்கான 25 மணிநேர கவுன்ட் டவுன் நேற்று மாலை 3.58 மணிக்கு துவங்கியது.

இன்று (5ஆம் தேதி) மாலை 5.28 மணிக்கு இந்த ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. இந்த ராக்கெட் ஜிசாட் 19 என்ற 3136 கிலோ எடை கொண்ட இணைய தொலைத்தொடர்பு செயற்கைகோளை தாங்கிச் சென்றது. இதன் மூலம் இந்தியாவின் இணையதள வேகத்தையும் மிக அதிக அளவில் உயர்த்துவதுடன், விண்ணிற்கு மனிதர்களையும் அனுப்ப முடியும். இந்த ராக்கெட்டானது இந்திய தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.


அடுத்த செய்தி