ஆப்நகரம்

டிஜிட்டல் மயமாகின்றன ஹரியானா கிராமங்கள்

ஹரியானாவின் 100 கிராமங்களில் பொதுச்சேவை மையங்கள் என்ற பெயரில் வை-ஃபை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

TNN 26 Dec 2016, 11:44 am
ஹரியானாவின் 100 கிராமங்களில் பொதுச்சேவை மையங்கள் என்ற பெயரில் வை-ஃபை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
Samayam Tamil haryana connects 100 villages with wi fi services
டிஜிட்டல் மயமாகின்றன ஹரியானா கிராமங்கள்


ஹரியானாவில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாளை முன்னிட்டு அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் 53 புதிய தகவல் தொழில்நுட்ப சேவைகளை தொடங்கி வைத்தார்.

அப்போது, ஹரியானாவில் உள்ள 100 கிராமங்களுக்கு வை-ஃபை இணைய வசதியையும் அவர் தொடங்கி வைத்துள்ளார். கிராமங்களில் உள்ள தொழில் முனைவோரும் மாணவர்களும் பயனடையும் வகையில் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளதாகவும் இந்த வை-ஃபை மையங்கள் பொதுச் சேவை மையம் என்ற பெயரில் இயங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் ரொக்கமில்லா பரிவர்த்தனை செய்தவர்களுக்கு பரிசுகள் அறிவிப்பதும் நடைபெற்றது. இதில் 65 பேர் வெற்றியாளர்ளாகத் தேர்வுசெய்யப்பட்டனர். அவர்களில் 5 பேருக்கு ரூ.10,000 பரிசும் 10 பேருக்கு ரூ.5000 பரிசும் 50 பேருக்கு ரூ.1000 பரிசும் வழங்கப்பட்டது.

மேலும், மாவட்டம் தோறும் உள்ள அடல் சேவா கேந்திரங்களில் ஈ-திஷா என்ற பெயரில் 170 பொதுச்சேவைகள் அளிக்கும் மையங்களும் தொடங்கிவைக்கப்பட்டுள்ளன.

பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு டிஜிட்டல் சான்றிதழ்கள் டிஜிட்டர் லாக்கர் சேவை மூலம் அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி