ஆப்நகரம்

மார்ச் மாதம் சார்க் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ தகவல்

இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு அதன் அடுத்த நடவடிக்கையாக, சார்க் செயற்கைக்கோளை விண்ணில் ஏவ உள்ளதாகக் கூறியுள்ளது.

TNN 15 Feb 2017, 8:04 pm
இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு அதன் அடுத்த நடவடிக்கையாக, சார்க் செயற்கைக்கோளை விண்ணில் ஏவ உள்ளதாகக் கூறியுள்ளது.
Samayam Tamil isro planning launch of saarc satellites in march
மார்ச் மாதம் சார்க் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ தகவல்


பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே, இஸ்ரோ சார்பாக, இன்று 104 செயற்கைக்கோள்கள் ஒரே ராக்கெட்டில் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டன. இந்தியா மட்டுமின்றி உலக விண்வெளி வரலாற்றிலேயே இது மைல் கல் சாதனையாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில், தனது அடுத்தக்கட்ட முயற்சியாக, சார்க் நாடுகளுக்கான செயற்கைக்கோளை வரும் மார்ச் மாதம் விண்ணில் ஏவ உள்ளதாக, இஸ்ரோ கூறியுள்ளது. தொலைத்தொடர்பு மற்றும் தொலை மருத்துவம் சேவைகளில் சார்க் கூட்டமைப்பு நாடுகளுக்கு உதவும் வகையில் இந்த செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான அறிவிப்பை, கடந்த 2014ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.

இதன்படி, சார்க் கூட்டமைப்பில் இருந்து பாகிஸ்தான் வெளியேற திட்டமிட்டுள்ள சூழலில், தெற்காசிய செயற்கைக்கோள் என, இதன் பெயரை மாற்ற உள்ளதாகவும் இஸ்ரோ குறிப்பிட்டுள்ளது. அதற்கடுத்தப்படியாக, ஜிசாட் 19 செயற்கைக்கோள் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது.

Space agency ISRO is planning to launch two satellites, including the one meant for the benefit of SAARC nations, in March and April this year.

அடுத்த செய்தி