ஆப்நகரம்

தலைவர்களின் சிலைக்கு முதல்வர் ஜெயலலிதா மரியாதை

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றதையடுத்து தலைவர்களின் சிலைக்கு மலர் தூவி முதல்வர் ஜெயலலிதா மரியாதை செலுத்தி வருகிறார்.

TNN 20 May 2016, 2:16 pm
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றதையடுத்து தலைவர்களின் சிலைக்கு மலர் தூவி முதல்வர் ஜெயலலிதா மரியாதை செலுத்தி வருகிறார்.
Samayam Tamil jayalalithaa to garland periyar anna and mgr statues
தலைவர்களின் சிலைக்கு முதல்வர் ஜெயலலிதா மரியாதை


தமிழக தேர்தல் வரலாற்றில் சிறப்பு மிக்க வெற்றியை பதிவு செய்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக மீண்டும் தமிழகத்தில் ஆட்சி அமைக்கவுள்ளது. தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, சென்னையில் ஜெமினி பாலத்தின் அருகே உள்ள பெரியார் சிலைக்கு முதல்வர் ஜெயலலிதா மலர் தூவி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதைத் தொடர்ந்து, அண்ணா சாலியில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார். மேலும், ஸ்பென்சர் வணிகவளாகம் அருகேயுள்ள எம்.ஜி.ஆரின் சிலைக்கும் முதல்வர் ஜெயலலிதா மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். இன்று மாலை நடைபெறவுள்ள அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் மீண்டும் முதல்வராக ஜெயலலிதா தேர்வு செய்யப்படவிருக்கிறார்.

அடுத்த செய்தி