ஆப்நகரம்

ஜியோ இலவச சேவை ஏப்ரல் வரை நீட்டிக்கப்பட வாய்ப்பு

ரிலையன்ஸ் ஜியோவின் இலவச சேவை ஏப்ரல் மாதம் வரை நீட்டிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

TNN 29 Mar 2017, 9:04 pm
ரிலையன்ஸ் ஜியோவின் இலவச சேவை ஏப்ரல் மாதம் வரை நீட்டிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
Samayam Tamil jio prime subscription extend to 30 april
ஜியோ இலவச சேவை ஏப்ரல் வரை நீட்டிக்கப்பட வாய்ப்பு


ரிலையன்ஸ் ஜியோவின் இலவச சேவை மார்ச் 31ஆம் தேதியுடன் முடிகிறது. இதற்குப் பிறகு, ஜியோ கட்டண சேவை தொடங்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலவச சேவையை மேலும் ஒரு மாத காலம் நீட்டித்து அறிவிக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஏப்ரல் 30ஆம் தேதி வரைக்கும் ஜியோவின் இலவச சேவை தொடரலாம். அதாவது, ஏப்ரல் 30ஆம் தேதி வரை இலவசமாக இன்டர்நெட், வாய்ஸ் கால், எஸ்எம்எஸ் என அனைத்தையும் பயன்படுத்த முடியும்.

இருப்பினும், ஜியோ கட்டண சேவையிலும் சலுகைக் கட்டணங்களை அளிக்கும் ஜியோ ப்ரைம் வசதியை அந்நிறுவனம் அளித்துள்ளது. ரூ.99 செலுத்தி ஜியோ ப்ரைம் உறுப்பினராக வாடிக்கையாளர்கள் முந்திக்கொண்டிருக்கின்றனர். இதிலும் பல்வேறு வாலட் அப்ளிகேஷன்களும் ஜியோ மணி அப்ளிகேஷனும் அதிரடி சலுகைகளைக் கொடுக்கிறது. இப்போது, ஜியோ இலவச சேவை நீட்டிக்கப்படலாம் என்பது ஜியோ வாடிக்கையாளர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி