ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தடையற்ற இலவச 4ஜி சேவை வழங்குவதால், ஃபேஸ்புக் இணையதள நிறுவனத்திற்கு மறைமுகமாகப் பல மடங்கு வருமானம் கிடைப்பதாக, தெரியவந்துள்ளது.
இன்றைய யுகத்தில், ஸ்மார்ட்ஃபோன் அல்லது மடிக்கணினி, கம்ப்யூட்டர் என எதுவாக இருந்தாலும், அதில் இணையதள இணைப்பு கொடுத்த உடனே, முதல்வேலையாக ஃபேஸ்புக்கில் கணக்கு தொடங்குவதுதான் நம் அனைவரின் வேலையாக உள்ளது.
இந்நிலையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தானே முன்வந்து, இலவச 4ஜி சேவையை அறிவித்தது. இதனால், நாடு முழுவதும் ஜியோ வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்து கிடுகிடுவென அதிகரித்து வருகிறது.
அதேசமயம், ஜியோவின் இலவச சேவையை பயன்படுத்தி பலரும் ஃபேஸ்புக் இணையதளத்தை அதிகம் பார்வையிடுகின்றனர். அதன் வழியே, ஆன்லைன் ஷாப்பிங் செய்யவும் தொடங்கியுள்ளனர். இதனால், ஜியோ நிறுவனத்தைவிட, ஃபேஸ்புக் நிறுவனத்திற்கே, அதிக வருமானம் கிடைப்பதாகவும், கடந்த சில மாதங்களில் மட்டுமே ஃபேஸ்புக் நிறுவனத்தின் வருமானம் வியத்தகு வளர்ச்சியை எட்டியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆசிய பிராந்தியத்தில் குறிப்பாக, இந்தியாவில் இருந்து, நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் ஃபேஸ்புக்கில் கணக்கு தொடங்குவதாக, அதன் தலைமை நிதியதிகாரி டேவிட் கூறியுள்ளார். இதற்கு முக்கிய காரணமாக, ஜியோவின் இலவச சேவை உள்ளதாக, டேவிட் சுட்டிக்காட்டி உள்ளார்.
Reliance Jio's free data offer and subsequent moves by competitors to reduce data charges look to have had a dramatic impact on Facebook usage in India. The impact was so much that it took Facebook's global monthly active user (MAU) numbers to record highs.
இன்றைய யுகத்தில், ஸ்மார்ட்ஃபோன் அல்லது மடிக்கணினி, கம்ப்யூட்டர் என எதுவாக இருந்தாலும், அதில் இணையதள இணைப்பு கொடுத்த உடனே, முதல்வேலையாக ஃபேஸ்புக்கில் கணக்கு தொடங்குவதுதான் நம் அனைவரின் வேலையாக உள்ளது.
இந்நிலையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தானே முன்வந்து, இலவச 4ஜி சேவையை அறிவித்தது. இதனால், நாடு முழுவதும் ஜியோ வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்து கிடுகிடுவென அதிகரித்து வருகிறது.
அதேசமயம், ஜியோவின் இலவச சேவையை பயன்படுத்தி பலரும் ஃபேஸ்புக் இணையதளத்தை அதிகம் பார்வையிடுகின்றனர். அதன் வழியே, ஆன்லைன் ஷாப்பிங் செய்யவும் தொடங்கியுள்ளனர். இதனால், ஜியோ நிறுவனத்தைவிட, ஃபேஸ்புக் நிறுவனத்திற்கே, அதிக வருமானம் கிடைப்பதாகவும், கடந்த சில மாதங்களில் மட்டுமே ஃபேஸ்புக் நிறுவனத்தின் வருமானம் வியத்தகு வளர்ச்சியை எட்டியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆசிய பிராந்தியத்தில் குறிப்பாக, இந்தியாவில் இருந்து, நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் ஃபேஸ்புக்கில் கணக்கு தொடங்குவதாக, அதன் தலைமை நிதியதிகாரி டேவிட் கூறியுள்ளார். இதற்கு முக்கிய காரணமாக, ஜியோவின் இலவச சேவை உள்ளதாக, டேவிட் சுட்டிக்காட்டி உள்ளார்.
Reliance Jio's free data offer and subsequent moves by competitors to reduce data charges look to have had a dramatic impact on Facebook usage in India. The impact was so much that it took Facebook's global monthly active user (MAU) numbers to record highs.