ஆப்நகரம்

BARC Jobs 2019: கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை!

கல்பாக்கம் மற்றும் தாராப்பூரில் செயல்பட்டு வரும் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விபரங்களை இங்கு காணலாம்.

Samayam Tamil 5 Jul 2019, 12:01 pm
மத்திய அரசின் கட்டுபாட்டில் செயல்படும் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் உதவித்தொகையுடன் கூடிய பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படுபவர்கள் கல்பாக்கம் மற்றும் தாராப்பூரில் உள்ள அணு ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியமர்த்தப்படுவார்கள். இது பற்றிய விபரங்கள் பின்வருமாறு:
Samayam Tamil bhabha job


நிறுவனம்: பாபா அணு ஆராய்ச்சி மையம்
அமைப்பு: மத்திய அரசு
காலியிடங்கள்: கல்பாக்கம் – 32, தாராப்பூர் – 15
விண்ணப்பம் தொடங்கும் நாள்: 8 ஜூலை 2019
விண்ணப்பம் முடியும் நாள்: 7 ஆகஸ்ட் 2019
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
அதிகாரப்பூர்வ இணையதளம்: www.barc.gov.in
விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்: https://recruit.barc.gov.in/barcrecruit/main_page.jsp
வயது வரம்பு: 18 முதல் 25 வரையில்
கல்வித்தகுதி: 10, 12ம் வகுப்பு, ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணிகள்: ஆலை இயக்குபவர், ஆய்வக உதவியாளர், பாயலர் ஆபரரேட்டர், பிட்டர், வெல்டர், டர்னர், எலெக்ட்ரிசீயன், மெக்கானிக், பெயிண்டர் உள்ளிட்ட பல்வேறு பணிகள்.

தேர்வு முறை: இரண்டு கட்டமாக எழுத்துத் தேர்வு, திறனறிவுத் தேர்வு. எழுத்துத் தேர்வில் நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு.

சம்பளம்: முதல் வருட பயிற்சியில் மாதம் 10,500 ரூபாய், இரண்டாம் வருட பயிற்சியில் 12,500 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும். பணியமர்த்தப்பட்ட பின்னர், பதவிக்கு ஏற்ப மாதம் 25,500 ரூபாய் வரையில் ஊதியம் வழங்கப்படும்.

இந்த பணியில் சேருவதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள், recruit.barc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று அதனை பூர்த்தி செய்து, ஆகஸ்ட் 7ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். கல்பாக்கம், தாராப்பூர் ஆகியவற்றில் தனித்தனியாக உள்ள காலியிடங்கள், பணிகள், பதவிகள் உள்ளிட்ட முழுமையான விபரங்களை அதிகாரப்பூர்வ விளம்பரத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளவும். பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் வேலைவாயப்பு விளம்பரத்தைப் பார்க்க இங்கு க்ளிக் செய்யவும்.

அடுத்த செய்தி