ஆப்நகரம்

பி.இ முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை.. உடனே விண்ணப்பியுங்கள்.. இன்றே கடைசி!

மத்திய அரசின் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் தொழில்நுட்ப அலுவலர் பணிக்கு, பி.இ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.

Samayam Tamil 30 Sep 2019, 1:38 pm
ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில், இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. யார் யார் விண்ணப்பிக்கலாம், மொத்தம் எத்தனை காலியிடங்கள் உள்ளது உள்ளிட்ட விபரங்களை இங்கு பார்க்கலாம். முக்கிய குறிப்பு, இதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.
Samayam Tamil ECIL JOB


மத்திய அரசின் ஆளுகைக்கு உட்பட்ட மின்னணுவியல் நிறுவனம் ஹைதராபாத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் தற்போது ஜூனியர் டெக்னிக்கல் ஆபீசர், அதாவது இளநிலை தொழில்நுட்ப அலுவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மொத்தம் 200 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இன்ஜினியரிங்கில் ECE, EEE, EIE, மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சைன்ஸ், ஐடி ஆகியவற்றில் ஏதனும் ஒரு பிரிவில் முதல் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். SC/ST பிரிவினர்களாக இருந்தால் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது.

விண்ணப்பதாரர்கள் 31.08.1989 தேதிக்குப் பிறகு பிறந்தவர்களாக இருக்க வேண்டும். மாதச்சம்பளம் 20,072 ரூபாய் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்ஜினியரிங் பாடத்தில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆறு மாதம் முன்அனுபவம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

ஒப்பந்த காலம் ஆறு மாதம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஆறு மாதத்திற்குப் பிறகு ஒப்பந்த காலத்தை நீட்டிக்கச் செய்யவும் வாய்ப்புகள் உள்ளது. எனவே, இன்ஜினியரிங் முடித்து வேலை தேடுபவர்கள் தாராளமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். நேர்முகத்தேர்வின் போது சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். எனவே, விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்காக தங்களது அசல் சான்றிதழ்களை நேர்முகத்தேர்வின் போது எடுத்துச் செல்ல வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:
ELECTRONICS CORPORATION OF INDIA LIMITED,
Na anda Complex, CLDC, TIFR Road,
Hyderabad – 500 062
Email: hrrect@ecil.co.in

மேற்கண்ட பணியில் சேர விரும்பும் இன்ஜினியரிங் முடித்தவர்கள் http://careers.ecil.co.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் வழியே மட்டுமே விண்ணப்பிக்க முடியும். வரும் செப்டம்பர் 30 ஆம் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, விண்ணப்பதாரர்கள் காலம் தாழ்த்தாமல் உடனே விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

முக்கிய உரலி (URL):
1. விரிவான அறிவிப்பு
2. விண்ணப்பிக்கும் முறை
3. முக்கிய நாட்கள்
4. விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்

அடுத்த செய்தி