ஆப்நகரம்

இஸ்ரோவில் வேலை.. விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம்!

இஸ்ரோவில் ஆராய்ச்சியாளர், தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பப்பதிவு இன்றோடு (ஏப்ரல் 3) முடிவடைந்த நிலையில், தற்போது விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இது பற்றிய விவரங்களை இங்கு பார்க்கலாம்.

Samayam Tamil 3 Apr 2020, 5:47 pm
Indian Space Research Organisation (ISRO) இஸ்ரோ நிறுவனத்தின் ஒரு அங்கமாக விண்வெளி பயன்பாட்டு மையம் Space Application Centre (SAC) செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் ஆராய்ச்சியாளர், தொழில்நுட்ப உதவியாளர், டெக்னீசியன், வரைவாளர் ஆகிய பணிகளுக்கு கடந்த மார்ச் 14 ஆம் தேதி வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த செய்தியை படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.
Samayam Tamil ISRO Recruitment 2020


அதன்படி மொத்தம 55 காலியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கான விண்ணப்பப்பதிவு ஏப்ரல் 3 ஆம் தேதி முடிவடைவதாக இருந்தது. இந்நிலையில், தற்போது மே 1 ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என்று கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க தவறியவர்கள் தற்போது விண்ணப்பிக்கலாம்.


எலெக்ட்ரானிக்ஸ் துறையில் சைன்டிஸ்ட் / இன்ஜினியர் பணிக்கு வயது வரம்பு எதுவும் இல்லை. மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 முதல் 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்கும் என்ன படித்திருக்க வேண்டும், சம்பள விகிதம் உள்ளிட்ட முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.

மேற்கண்ட பணியில் சேருவதற்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள், இஸ்ரோவின் www.sac.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து, மே 1 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பக்கட்ணடம், தேர்வுக்கட்டணம் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது பற்றிய மேலும் விவரங்களுக்கு இஸ்ரோ நிறுவனம் ISRO SAC வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.

அடுத்த செய்தி