ஆப்நகரம்

NABARD வங்கியில் வேலைவாய்ப்பு! உள்ளூரிலேயே தேர்வு எழுதலாம்!!

விவசாயிகளுக்கான மத்திய அரசின் நபார்டு வங்கியில் காலியாக உள்ள மேலாளர், உதவிமேலாளர் பணியிடங்களை நிரப்பப்படுகிறது. இதற்காக தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

Samayam Tamil 15 May 2019, 10:59 am
விவசாயிகளுக்கான மத்திய அரசின் நபார்டு வங்கியில் காலியாக உள்ள மேலாளர், உதவிமேலாளர் பணியிடங்களை நிரப்பப்படுகிறது. இதற்காக தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதன் விபரம் பின்வருமாறு:
Samayam Tamil nabard


நிறுவனம்: நபார்டு வங்கி
அமைப்பு: மத்திய அரசு
அதிகாரப்பூர்வ இணையதளம்: https://www.nabard.org/
பதவி 1: மேலாளர்
காலியிடங்கள்: 8
வயதுவரம்பு: 21-35
கல்வித்தகுதி: 60% மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு
ஊதியம்: 73,600/-
விண்ணப்பம் தொடங்கிய நாள்: 10 மே 2019
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 26 மே 2019

பதவி 2: உதவி மேலாளர்
காலியிடங்கள்: 79
வயது: 21 – 30
கல்வித்தகுதி: 50% மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு
ஊதியம்: 60,000/-
விண்ணப்பம் தொடங்கும் நாள்: 10 மே 2019
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 26 மே 2019


தேர்வு முறை:
மூன்று நிலைகளாக விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். முதல் இரண்டு நிலைகள் கணினி வாயிலாகவும், இறுதி நிலை நேர்முகத் தேர்வாகவும் நடைபெறும். தேர்வு பாடத்திட்டங்கள் குறித்த விபரங்கள் நபார்டு வங்கியின் அதிகார்ப்பூர்வ விளம்பரத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

தேர்வு மையம்:
மொத்தம் 33 மாநிலங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில், சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், திருப்பூர், ஈரோடு, விருதுநகர், நாமக்கல், நாகர்கோவில் ஆகிய இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படுகிறது.

விண்ணப்பக்கட்டணம்:
எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு: 150 ரூபாய்
மற்ற பிரிவினருக்கு: 800 ரூபாய்

இந்த பணியில் சேருவதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://www.nabard.org/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் வரும் 26ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது பற்றிய முழுமையான விபரங்களுக்கு நபார்டு வங்கியின் அதிகாரப்பூர்வ விளம்பரத்தைப் பார்க்கவும்.

அடுத்த செய்தி