ஆப்நகரம்

அலுமினிய உற்பத்தி நிறுவனத்தில் வேலை.. விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம்!

NALCO Recruitment 2020: மத்திய அரசின் அலுமினிய உற்பத்தி நிறுவனத்தில் (National Aluminum Company Limited - NALCO) காலியாக உள்ள இன்ஜினியரிங் பணியிடங்களை நிரப்பப்படுகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால், இதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம், என்ன தகுதி பெற்றிருக்க வேண்டும் என்பது பற்றிய முழுமையான விவரங்களை இங்கு பார்க்கலாம்.

Samayam Tamil 14 Apr 2020, 5:04 pm
National Aluminum Company Limited (NALCO) எனப்படும் மத்திய அரசின் அலுமினிய உற்பத்தி நிறுவனத்தில் காலியாக உள்ள இன்ஜினியரிங் பணியிடங்களை நிரப்பப்படுகிறது. இதற்கான விண்ணப்பப்பதிவு முடிந்த நிலையில், தற்போது கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
Samayam Tamil NALCO Recruitment 2020


மத்திய அரசின் ஆளுகைக்கு உட்பட்ட தேசிய அலுமினிய உற்பத்தி நிறுவனத்தில் இருந்து கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி வேலைவாய்ப்பு அறிவிக்கை வெளியானது. அதன்படி, மேனேஜ்மெட் டிரெய்னி பணிக்கு இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இன்ஜினியரிங் படிப்பும், கேட் தேர்வு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.


மொத்தம் 120 காலியிடங்கள் இருப்பதாகவும், அதிகபட்சமாக மெக்கானிக்கல் துறையில் 45 இடங்களும், எலெக்ட்ரிக்கல் துறையில் 29 இடங்களும் அறிவிக்கப்பட்டது. இந்த பணிக்கு ஏப்ரல் 9 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், கொரோனா வைரஸ் பாதிப்பு ஊரடங்கு காரணத்தினால், தற்போது விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, விண்ணப்பிப்பதற்கு மே 2 ஆம் தேதி வரையில் கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மற்றபடி, இதர வயது வரம்பு, கல்வித்தகுதி, காலியிடங்களின் எண்ணிக்கை போன்றவற்றில் மாற்றங்கள் செய்யப்படவில்லை.

நால்கோ நிறுவனத்தில் மேனேஜ்மெண்ட் டிரெய்னிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள், www.nalcoindia.com என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி, இடஒதுக்கீடு, வயது வரம்பு உள்ளிட்ட முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள, நால்கோ அறிவிப்பைப் பார்க்கவும்.
https://nalcoindia.com/wp-content/uploads/2020/03/Recuitment_GET_2020_ENG.pdf

அடுத்த செய்தி