ஆப்நகரம்

எப்போது தபால் துறை தேர்வு? தயாராகுங்கள்...!!

மாநில மொழிகளில் இத்தேர்வை நடத்தவில்லை என்பதால் ரத்து செய்யப்பட்ட தபால் துறை பல்திறன் பணியாளர்கள் தேர்வு செப்டம்பர் மாதம் அந்தந்த மாநில மொழிகளிலேயே நடத்தப்படும்.

Samayam Tamil 31 Jul 2019, 1:06 pm
ரத்து செய்யப்பட்ட தபால் துறை தேர்வு வரும் செப்டம்பர் 15ஆம் தேதி நடக்கும் என தபால் துறை அறிவித்துள்ளது.
Samayam Tamil post-office-1


நாடு முழுவதும் தபால் துறை நடத்தும் பல்திறன் பணியாளர்கள் (Multi Tasking Staff), மெயில் கார்டு (Mail Guard), தபால்காரர் (Postman), அஞ்சலக உதவியாளர் (Postal Assistant), சார்டிங் அசிஸ்டெண்ட் (Sorting Assistant) போன்ற தபால் துறை பணியிடங்களுக்கான தேர்வுகளுக்கு கடந்த ஜூலை 14ஆம் தேதி நடைபெற்றது. மாநில மொழிகளில் இத்தேர்வை நடத்தவில்லை என நாடாளுமன்ற உறுப்பிர்கள் கடும் கண்டனம் தெரிவித்ததால், அத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.

இந்தி, ஆங்கிலத்தில் மட்டும் நடந்த தபால் துறை தேர்வுகள் ரத்து

இந்தி பேசாத மாநிலங்களில் ரத்து செய்யப்பட்ட தபால் துறை தேர்வு அந்தந்த மாநில மொழிகளிலேயே மீண்டும் நடத்தப்படும் எனவும் கூறப்பட்டது. இதன்படி வரும் செப்டம்பர் 15ஆம் தேதி ரத்தான தபால் துறை தேர்வு மீண்டும் நடைபெற உள்ளது. இதனை தபால் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


இந்தி பேசாத மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகளிலேயே அஞ்சல் துறை பணிகளுக்கான தேர்வு நடைபெறும். எனவே, செப்டம்பர் மாதம் தமிழகத்தில் நடக்கும் தபால்துறை தேர்வு தமிழ் மொழியிலேயே நடக்கும்.

கடந்த மே 10ஆம் தேதி இந்த பணிகளுக்கான தேர்வுகளின் பாடத்திட்டத்தினை மாற்றி அமைத்தது. அத்துடன் இந்தி மற்றும் ஆங்கிலத்திலும், இந்தி மொழி பேசாத மாநிலங்களில் 23 மாநில மொழிகளிலும் வினாத்தாள்கள் அமையும் என்று அறிவித்திருந்தது.

தபால்துறை தேர்வுகளை தமிழில் நடத்தக்கோரி அதிமுகவினர் அமளி

இனி முதல் தாளுக்கான தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளில் மட்டுமே தரப்படும் என்றும் இரண்டாம் தாள் தேர்வுக்கான வினாத்தாள் ஆங்கிலத்திலிருந்து அந்தந்த மாநில மொழிகளில் வழங்கப்படும் என்றும் மத்திய அரசு கடந்த ஜூலை 12ஆம் தேதி அறிவித்தது.


இதனையடுத்து ஜூலை 14ஆம் தேதி நடைபெற்ற அஞ்சல்துறை தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மட்டுமே நடைபெற்றன. இதனைக் கண்டித்து தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து கட்சிகளும் குரல் எழுப்பின.

ஆன்லைன் தேர்வு நடத்தலாமா? ஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க உத்தரவு

அடுத்த செய்தி