ஆப்நகரம்

எஸ்பிஐ வங்கிப்பணி தேர்வு எழுதுவோருக்கு முக்கிய அறிவிப்பு

மெயின் தேர்வு வரும் ஜூலை 20ஆம் தேதி நடக்க உள்ளது. இத்தேர்வை எழுத உள்ளவர்கள் http://sbi.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்களுடைய அட்மிட் கார்டை டவுன்லோட் செய்யலாம்.

Samayam Tamil 10 Jul 2019, 1:25 pm
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் புரோபேஷனரி அதிகாரி பணியில் சேர்வதற்காக எஸ்பிஐ பி.ஓ. மெயின் தேர்வு எழுதுவோருக்கான அட்மிட் கார்டு இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
Samayam Tamil Crack-SBI-PO-2019


பொதுத்துறை வங்கியில் ஒன்றான எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள 2,000 புரோபேஷனரி அதிகாரி (Probationary Officer) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி வெளியானது.

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் ஏப்ரல் 2, 2019 அன்று தொடங்கியது. ஏப்ரல் 22, 2019 அன்று முடிந்தது. இதனையடுத்து ஜூன் 8ஆம் தேதியும் 9ஆம் தேதியும் தேர்வுகள் நடைபெற்றன.

இதனையடுத்து ஜூன் 29ஆம் தேதி எஸ்பிஐ பி.ஓ. முதல் நிலைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. மூன்று கட்டங்களாக நடைபெறும் இத்தேர்வில் முதல்நிலைத் தேர்வுக்குப் பின் மெயின் தேர்வு எனப்படும் முதன்மைத் தேர்வும் அதனைத் தொடர்ந்து நேர்முகத் தேர்வும் நடக்க உள்ளன.

மெயின் தேர்வு வரும் ஜூலை 20ஆம் தேதி நடக்க உள்ளது. இதற்கான அட்மிட் கார்டு. இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இத்தேர்வை எழுத உள்ளவர்கள் http://sbi.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்களுடைய அட்மிட் கார்டை டவுன்லோட் செய்யலாம்.

மெயின் தேர்வின் முடிவுகள் ஆகஸ்ட் மாத மூன்றாவது வாரம் வெளியாகும். அடுத்த ஒரு வாரத்தில் மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு வரும்.

செப்டம்பரில் நேர்முகத் தேர்வு நடத்தப்படும். அக்டோபர் இரண்டாம் வாரத்தில் இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டு பணி நியமன அறிவிப்பு வெளிவரும்.

அடுத்த செய்தி