ஆப்நகரம்

மத்திய அரசின் SEBI நிறுவனத்தில் வேலை! விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு!!

SEBI Recruitment 2020: மத்திய அரசின் இந்திய பங்குசந்தை கட்டுப்பாட்டு அமைப்பில் கிரேடு ஏ பதவியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 22 Apr 2020, 6:21 pm
SEBI Recruitment 2020: மத்திய அரசின் இந்திய பங்குசந்தை கட்டுப்பாட்டு அமைப்பில் கிரேடு ஏ பதவியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil SEBI Recruitment 2020


மத்திய அரசின் ஆளுகைக்கு உட்பட்டு இந்திய பங்குசந்தை கட்டுப்பாட்டு அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் அசிஸ்டெண்ட் மேனேஜர் கிரேடு ஏ பதவிக்கு 147 காலியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியாகியுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 30 ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக SEBI அசிஸ்டெண்ட் மேனேஜர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மே 31 ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

காலியிடங்கள்:
மொத்தம் 147 காலியிடங்கள் உள்ளது. பொது- 80, சட்டம் – 34, தகவல் தொழில்நுட்பம் – 22, சிவில் இன்ஜினியர் – 1, எலெக்ட்ரிக்கல் இன்ஜினியர் – 4, ரிசர்ச் – 5, அதிகாரப்பூர்வ மொழி -1 ஆகும். இவை அனைத்தும் இடஒதுக்கீடு முறையில் நிரப்பப்படுகிறது.

வயது வரம்பு:
1 மார்ச் 1990 தேதியின் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

இதற்கு விண்ணப்பிக்க ஆர்வமும் விருப்பமும் உள்ளவர்கள், www.sebi.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, விண்ணப்பிக்கலாம். இது தொடர்பான முழுமையான விவரங்களுக்கு SEBI நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிக்கையைப் பார்க்கவும்.

அடுத்த செய்தி