ஆப்நகரம்

SBI PO Notification: எஸ்பிஐ வங்கியில் 2,000 பேருக்கு வேலை! இறுதியாண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்!!

எஸ்பிஐ வங்கியில் 2,000 பிஓ பதவிகளுக்கான பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் கல்லூரி இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் கூட விண்ணப்பிக்கலாம்.

Samayam Tamil 2 Apr 2019, 10:50 am
பொதுத்துறை வங்கியில் ஒன்றான எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள 2,000 புரோபேஷனரி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விபரம் பின்வருமாறு:
Samayam Tamil _e5cd99f0-451f-11e8-873d-4d6fb1883171

(கரூர் வைசியா வங்கியில் பல்வேறு காலி பணியிடங்கள்!)
நிர்வாகம்: பாரத ஸ்டேட் வங்கி
பணி: Probationary Officer
காலிபணியிடங்கள்: 2,000
பணியிடம்: நாடு முழுவதும்
(NPCIL: அணுமின் நிலையத்தில் வேலைவாய்ப்பு!)
தகுதி: ஏதாவது ஒரு பட்டப்படிப்பு. பட்டப்படிப்பில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு; 21 முதல் 30 வயதிற்குள்ளாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்ச்சி உண்டு
தேர்வு செய்யப்படும் முறை: பிரிமிலினரி தேர்வு, மெயின் தேர்வு, கலந்துரையாடல் தேர்வு, நேர்முகத்தேர்வு
(IDBI Bank CTO Notification: ஐடிபிஐ வங்கியில் பல்வேறு பணிகள்!)
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்: https://ibpsonline.ibps.in/sbiposmar19/
விண்ணப்பம் தொடங்கும் தேதி: 02/04/2019
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 22/04/2019
விண்ணப்பக் கட்டணம்: பொது/ஓபிசி பிரிவனருக்கு 750 ரூபாய். மற்ற பிரிவினர்களுக்கு 125 ரூபாய்.
அதிகாரப்பூர்வ இணையதளம்: www.sbi.co.in
(FSSAI Recruitment 2019: மத்திய அரசு நிறுவனத்தில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகள்)
இந்த பணியில் சேர தகுதியும் திறமையும் உள்ளவர்கள், ஏபரல் 22ம் தேதிக்குள்ளாக விண்ணப்பிக்க வேண்டும். கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். கூடுதல் தகுதிகள், தேர்வு தேதிகள் பற்றிய முழுமையான விபரங்களுக்கு அதிகாரப்பூர்வ விளம்பரத்தை பார்க்கவும்: https://www.sbi.co.in/webfiles/uploads/files/careers/010419-Detailed-Eng-PO%202019.pdf

அடுத்த செய்தி