ஆப்நகரம்

துணை ராணுவ அதிகாரி பணிக்கான UPSC தேர்வில் புதிய நடைமுறை?

UPSC Paramilitary 2019: துணை ராணுவ அதிகாரி பணிக்கான UPSC தேர்வில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளது.

Samayam Tamil 10 Feb 2020, 12:37 pm
துணை ராணுவ அதிகாரி பணிக்கான யுபிஎஸ்சி தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றத்தை கொண்டு வரவும், அதனை ஐஏஎஸ், ஐபிஎஸ் போன் சிவில் சர்வீஸ் தேர்வோடு இணைக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
Samayam Tamil UPSC Paramilitary 2020


CRPF, BSF, CISF, ITBP மற்றும் SSB பாதுகாப்புப் படைகளை உள்ளிடக்கிய அங்கமாக CAPF செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 300 முதல் 400 பேர் CAPF க்கு தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். எழுத்துத்தேர்வு, உடற்திறன் தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். பெரும்பாலும் 20 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள்CRPF, BSC, CISF, ITBP படையில் சேருகிறார்கள்.

இந்த சூழலில் CAPFக்கு விண்ணப்பதாரர்களை தேர்வு செய்யும் அதிகாரி பதவிக்கான யுபிஎஸ்சி தேர்வு பாடத்திட்டத்தில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளதாக செய்திகள் வந்துள்ளது. மேலும், இந்த அதிகாரி பதவிக்கான தேர்வை, ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற சிவில் சர்வீஸ் தேர்வோடு இணைப்பதற்கும் மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

முன்னதாக கடந்தாண்டு OGAS என்ற ஒருங்கிணைந்த குரூப் ஏ சர்வீஸ் அமைப்பை CAPF அங்கமாக மாற்றுவதற்கு மத்திய அரசு அனுமதியளித்தது. OGAS க்கு ஆட்களை தெரிவு செய்வதற்கான அதிகாரம், ஊதியம் நிர்ணயித்தல், படைகளை வழிநடத்துதல் உள்ளிட்ட அதிகாரங்கள் உள்ளது.

இருப்பினும், தற்போது யுபிஎஸ்சி தேர்வில் வரவுள்ள மாற்றங்கள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிக்கை எதுவும் வெளியாகவில்லை. விரைவில் இது பற்றிய விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி