ஆப்நகரம்

10,12ம் வகுப்பு போதும்.. பாதுகாப்பு ஆராய்ச்சித் துறையில் வேலை..!

டி.ஆர்.டி.ஓ எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சித் துறையில் காலியாக உள்ள 224 பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

Samayam Tamil 14 Sep 2019, 11:49 am
மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் நேரடி ஆளுகைக்கு உட்பட்டு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக் கழகம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் தற்போது பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு கல்வித்தகுதி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.
Samayam Tamil drdo.


விண்ணப்பதாரர்கள் 18 முதல் 27 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். கணினி வழித்தேர்வு, திறனறிவுத் தேர்வு, உடற்திறன் தேர்வு ஆகியவற்றின் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாதுகாப்பு அமைச்சகத்தில் மிலிட்டரி இன்ஜினியர் வேலைக்கு தேர்வுகள் அறிவிப்பு!

விண்ணப்பதாரர்கள் பாதுகாப்பு ஆராய்ச்சித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான drdo.gov.in என்ற பக்கத்திலோ, அல்லது எம்பிளாய்மண்ட் செய்தித்தாளிலோ அதிகாரப்பூர்வ அறிவிப்பை உறுதிசெய்து கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இந்த பணியில் சேருவதற்கு தகுதியும் திறமையும் உள்ளவர்கள் drdo.gov.in என்ற தளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து வரும் அக்டோபர் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

ராணுவத்தில் பணிபுரிய அரிய வாய்ப்பு!
நிறுவனம்: பாதுகாப்பு ஆராய்ச்சித் துறை
அமைப்பு: மத்திய அரசு
பணி: பல்வேறு பணிகள்
காலியிடங்கள்: 224
கல்வித்தகுதி: 10,12ம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு; 18-27
தேர்வு முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு
அதிகாரப்பூர்வ இணையதளம்: www.drdo.gov.in

அடுத்த செய்தி