ஆப்நகரம்

2021 ஆண்டில் இந்திய ராணுவத்தின் முதல் மகளிர் வீரர்கள் குழு தேர்வு!

2021ம் ஆண்டில் இந்திய ராணுவத்தில் 100 பெண்கள் கொண்ட முதல் மகளிர் பேட்ச் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு ஆண்களுக்கு நிகராக ராணுவப் பயிற்சி வழங்கப்படுகிறது.

Samayam Tamil 5 Sep 2019, 3:24 pm
இந்திய ராணுவத்தில் மகளிர் காவல் பிரிவுக்கு 100 பெண்களுக்கு மொத்தமாக பயிற்சி வழங்கப்படுகிறது. இவர்கள் தான் 2021ம் ஆண்டில் இந்திய ராணுவத்தின் முதல் பெண்கள் பேட்ச் ஆவார்கள். இந்த 100 பணியிடங்களுக்கு சுமார் 2 லட்சம் பெண்கள் விண்ணப்பித்திருந்தனர்.
Samayam Tamil woman army


இந்திய ராணுவத்தில் சேருவதற்கு பெண்கள் அதிகளவில் சேருவதற்கு விரும்பி வருகின்றனர். அந்த வகையில், அண்மையில் ராணுவத்தில் உள்ள மகளிர் காவல் பிரிவில் காலியாக இருந்த 100 இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. வெறும் 100 பணியிடங்களுக்கு 2 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் விண்ணப்பித்தனர்.

இதனையடுத்து ராணுவத்துக்கான ஆள் சேர்ப்பு முறைப்படி, எழுத்துத்தேர்வு, உடற்திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட அனைத்து தேர்வுமுறைகளும் நடத்தப்பட்டு 100 பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் 61 வாரங்கள் ராணுவப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்த பயிற்சி வரும் டிசம்பர் மாதம் முதல் தொடங்குகிறது. மொத்தம் 61 வாரங்கள் பயிற்சி நடைபெறும். பெண் ராணுவ அதிகாரிகள் பயிற்சி வழங்குவர். ஆண்களுக்கு நிகராக 100 பெண்கள் ஒரு சேர பயிற்சி பெறுகிறார்கள். 61 வாரங்கள் பயிற்சி என்பது கிட்டத்தட்ட 427 நாட்கள். எனவே, இப்போதுள்ள பெண்கள் 2021ம் ஆண்டில் ராணுவத்தில் பதவி பெறுவார்கள். இதனால், இந்திய ராணுவத்தில் 2021ம் ஆண்டின் முதல் மகளிர் பேட்ச் என்ற பெருமை இவர்கள் பெற்றுள்ளார்கள்.

ராணுவப்பயிற்சி நிறைவு பெற்றதும் அவர்கள் அனைவரும் ராணுவத்திலும், மாநில அரசின் கட்டுபாட்டில் செயல்படும் காவல்நிலையங்களிலும் பணியமர்த்தப்படுவார்கள். இதன் மூலம் மொத்த மகளிர் காவல் பிரிவில் பெண்களின் எண்ணிக்கை 1700 ஆக உயர்ந்துள்ளது. இதே போன்று ஒவ்வொரு வருடமும் மகளிர் காவல் பிரிவுக்கு 100 பெண்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

அடுத்த செய்தி