ஆப்நகரம்

அடுத்த மாதம் திருவண்ணாமலையில் ராணுவத்தில் ஆட்சேர்ப்பு முகாம்!

Indian Army Recruitment 2020: வரும் ஏப்ரல் மாதத்தில் திருவண்ணாமலையில் ராணுவத்துக்கான ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது. ராணுவத்தில் சேர துடிக்கும் துடிப்பான இளைஞர்கள், இந்த பேரணியில் கலந்து கொள்ளலாம்.

Samayam Tamil 4 Mar 2020, 11:35 pm
வரும் ஏப்ரல் மாதத்தில் திருவண்ணாமலையில் ராணுவத்துக்கான ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது. ராணுவத்தில் சேர துடிக்கும் துடிப்பான இளைஞர்கள், இந்த பேரணியில் கலந்து கொள்ளலாம்.
Samayam Tamil Indian Army Recruitment 2020


திருவண்ணாமலை ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகத்தின் சார்பில் சென்னை தலைமையக ஆட்சேர்ப்பு மண்டலத்தின் கீழ், இந்திய ராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு பேரணி நடைபெறுகிறது. இது தொடர்பான அறிவிக்கை www.joinindianarmy.nic.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, திருவண்ணாமலையில் உள்ளஅருணை இன்ஜினியரிங் கல்லூரியில் வைத்து வரும் ஏப்ரல் 15 முதல் 25 ஆம் தேதி வரையில் ராணுவத்துக்கான ஆட்சேர்ப்பு பேரணி நடைபெறுகிறது.

11 மாவட்டங்கள் இளைஞர்கள் பங்கேற்கலாம்:
கடலூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, புதுச்சேரி ஆகிய 11 இடங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த பேரணியில் கலந்து கொள்ளலாம்.

தேர்வு முறை:
சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்தகுதித் தேர்வு, உடற்திறன் தேர்வு, எழுத்துத்தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவ்வாறு தேர்வு செய்யப்படுபவர்கள், ராணுவத்தில் பயிற்சிக்கு உட்படுத்தப்படுவார்கள். வெற்றிகரமாக பயிற்சி காலம் முடித்த பிறகு, ராணுவத்தில் பணியமர்த்தப்படுவர்.

வயது வரம்பு:
1 அக்டோபர் 2020 தேதியின்படி விண்ணப்பதாரர்கள் 17 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பு பணிக்கு ஏற்றவாறு மாறுபட்டுள்ளது. அதன்படி, சிப்பாய் தொழில்நுட்பம், சோல்ஜர் டிரேட்ஸ்மேன் பணிக்கு 23 வயதுக்கு உட்பட்டவராகவும், சிப்பாய் பொது பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 21 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

ராணுவத்தில் சேருவதற்கு ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள், www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து மார்ச் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பேரணியில் கலந்து கொள்வதற்கான அனுமதிச் சீட்டு டிசம்பர் 19 ஆம் தேதிக்குப் பிறகு இணையதளத்தில் வெளியிடப்படும். அனுமதிச் சீட்டு இல்லாத விண்ணப்பதாரர்கள் பேரணியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

அடுத்த செய்தி