ஆப்நகரம்

தூய்மை பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு! மாதம் ரூ.15,700 சம்பளம்!!

Ariyalur Recruitment 2020: அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளத்தில் புதிதாக தூய்மை பணியாளர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கை வெளியாகியுள்ளது. இதற்கு யார் யார் விண்ணப்பிக்கலாம், எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பதை இங்கு பார்க்கலாம்

Samayam Tamil 27 Mar 2020, 6:22 pm
திருச்சி மத்திய சிறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஜெயங்கொண்டம் கிளைச் சிறையில் காலியாக உள்ள துப்புரவு பணியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். 1.7.2019 அன்றைய தேதியின்படி 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். BC / MBC பிரிவினர் 30 வயதிற்கு உட்பட்டும், SC / ST பிரிவினர் 35 வயதுக்கு உட்பட்டும் இக்க வேண்டும்.
Samayam Tamil TN Sweeper Recruitment 2020


துப்புரவு பணியாளர் ஊதிய விகிதம் 15,700 – 50,000 நிலை-1 தரம் -1ல் குறைந்த பட்ச தொகை ரூ.15,700 மற்றும் இதர தகுதி உள்ள படிகளும் ஆகும். இதற்கு முன்பு கோவையில் தூய்மை பணியாளர் பதவிக்கு 549 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு பட்டப்படிப்பு முதல் இன்ஜினியர், முதுநிலை பட்டதாரிகள் என 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர்.

எனவே, தற்போது திருச்சி தூய்மை பணியாளர் பதவிக்கும் தாரளமாக விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள். சுய விவரங்கள் (Resume) விண்ணப்பம் தயாரித்து, அதனை ஏப்ரல் 2 ஆம் தேதிக்குள் திருச்சி மத்திய சிறை கண்காணிப்பாளருக்கு அனுப்ப வேண்டும். இது பற்றிய விவரங்களுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள பத்திரிக்கைச் செய்தியைப் பார்க்கவும்.
Ariyalur Sweeper Recruitment Official Notification PDF

அடுத்த செய்தி