ஆப்நகரம்

8 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்குத் திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலை.. மாதம் ரூ.10,000 சம்பளம்..

Trichy Driver Recruitment 2019: திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகம் Trichy Employment Office Recruitment 2019 டிரைவர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

Samayam Tamil 18 Oct 2019, 2:07 pm
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் டிரைவர் பணிக்கு எட்டாம் வகுப்பு முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது பற்றிய விரிவான விபரங்களை இங்கு காணலாம்.
Samayam Tamil Trichy Employment Office
Trichy Driver Recruitment 2019: திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகம் Trichy Employment Office Recruitment 2019 டிரைவர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.


வேலைவாய்ப்பு அறிவிப்பு சுருக்கம்: Tirchy Driver Recruitment 2019

1நிறுவனம்திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகம்Tirchy Employment Office Recruitment 2019
2அமைப்புதமிழக அரசு
3அதிகாரப்பூர்வ இணையதளம்www.tiruchirappalli.nic.in
4பணிடிரைவர்
5பணி முறைஒப்பந்த அடிப்படை
6பணியிடம்திருச்சி
7காலியிடங்கள்1
8கல்வித்தகுதி8 ஆம் வகுப்பு தேர்ச்சி
9விண்ணப்பம் தொடங்கிய நாள்-
10விண்ணப்பம் முடியும் நாள்அக்டோபர் 31
11விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்
12தேர்வு நடைபெறும் நாள்-

திருச்சி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் இயங்கும் மண்டலப்பயிற்சி இணை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து www.tiruchirappalli.nic.in வேலைவாயப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர் பணி வழங்கப்படுகிறது. இது தற்காலிக வேலை என்றாலும், ஒப்பந்த காலத்தை நீட்டிக்கச் செய்யவும் வாய்ப்பு உள்ளது. மேலும், அடுத்தடுத்து வரும் வேலைவாய்ப்புகளில் இந்த பணி அனுபவத்தைக் கொண்டு முன்னுரிமையும் பெற முடியும். எனவே, தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த வேலைக்கு தாராளமாக விண்ணப்பிக்கலாம்.

TN Rural Development: தமிழ்நாடு ஊராட்சித்துறையில் வேலை!
விண்ணப்பதாரர்கள் எட்டாம் வகுப்பு முடித்தவராக இருக்க வேண்டும். அதற்கு மேல் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். இலகுரக / கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். அதாவது Light Vechicles, Heavy Vechicles Driving licence இருக்க வேண்டும். 3 ஆண்டுகள் டிரைவர் பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். கனரக வாகனமாக இருந்தால் குறைந்தது 6 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும்.

1 செப்டம்பர் 2019 அன்றைய தேதியின்படி, விண்ணப்பதாரர்கள் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி, குறிப்பிட்டவர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள், திருச்சி வேலைவாய்ப்பு மண்டலப்பயிற்சி இணை இயக்குநர் அலுவலகத்தில் டிரைவர் பணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். மாதம் பத்தாயிரம் ரூபாய் ஒப்பந்த ஊதியமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணியில் சேருவதற்கு தேவையான தகுதிகள் உள்ளவர்கள், சுயவிபரங்கள் அடங்கிய விண்ணப்பம், கல்விச்சான்றிதழ் நகல்கள், போட்டோ ஆகியவற்றை இணைத்து பதிவஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

பதிவஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி:
மண்டலப்பயிற்சி இணை இயக்குநர்,
மண்டலப்பயிற்சி இணை இயக்குநர் அலுவலகம் (முதல்தளம்),
அரசு பல்துறை கட்டிட வளாகம், காஜாமலை,
திருச்சி-20

TANGEDCO Apprenticeship 2019: TNEB யில் ஏகப்பட்ட வேலைவாய்ப்புகள் அறிவிப்பு! டிப்ளமோ, பி.இ படித்தவர்களுக்கு நல்ல வாய்ப்பு!!

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் அக்டோபர் 31ஆம் தேதிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும். அதன்பிறகு தாமதமாக வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்கபடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, டிரைவர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் உடனே விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இது பற்றி முழுமையான விபரங்களுக்கு திருச்சி வேலைவாய்ப்பு மண்டல அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பைப் பார்க்கவும்.
https://cdn.s3waas.gov.in/s3f73b76ce8949fe29bf2a537cfa420e8f/uploads/2019/10/2019101729.pdf

அடுத்த செய்தி