ஆப்நகரம்

சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலைவாயப்பு! 68 காலிபணியிடங்கள்!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக 68 சட்ட எழுத்தர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிகளில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

Samayam Tamil 27 Mar 2019, 12:34 pm
சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக 68 சட்ட எழுத்தர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிகளில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Samayam Tamil chennai high court


நிறுவனம்: சென்னை உயர்நீதிமன்றம்
பணி: சட்ட எழுத்தர் (Law Clerks)
காலிபணியிடங்கள்: 68
பணியிடம்: சென்னை
தகுதி: சட்டப்படிப்பு
வயது வரம்பு; 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது தளர்வு உண்டு
சம்பளம்: ரூ. 30,000 வரை
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.04.2019

இந்த பணிகளில் சேர தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://www.hcmadras.tn.nic.in/ வலைதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து The Registrar General, High Court, Madras-600 104 என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும். அல்லது estt.madrashiahcourt@gmail.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம். விண்ணப்பங்கள் 20.3.2019 க்குள் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும். ஏற்கனவே விண்ணப்பம் அனுப்பியவர்கள் மீண்டும் அனுப்ப தேவையில்லை. மீறி அனுப்பினால் இரண்டு விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும். இது குறித்து முழுமையான விபரங்களை தெரிந்து கொள்ள கீழ்கண்ட வலைப்பக்கத்தை பார்க்கவும்:

வரைமுறை: http://www.hcmadras.tn.nic.in/Law%20Clerk_Guidelines_2019.pdf
விண்ணப்பம்: http://www.hcmadras.tn.nic.in/Law%20Clerk_Application_Form_2019.pdf
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: http://www.hcmadras.tn.nic.in/Notf43of2019.pdf

அடுத்த செய்தி