ஆப்நகரம்

தமிழகத்தில் அரசு ஆசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

Kalakshetra Recruitment 2020: சென்னை Besant Arundale Senior Secondary School பள்ளியில் முதுநிலை ஆசிரியர் பணிக்கு (PGT Recruitment 2020) அறிவிக்கை வெளியாகியுள்ளது.

Samayam Tamil 27 Dec 2019, 10:51 am
சென்னையில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் கலாக்சேத்ரா நிறுவனத்தில் முதுநிலை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
Samayam Tamil Kalakshetra Recruitment 2020


மத்திய அரசின் கலாச்சாரத்துறையின் ஆளுகைக்கு உட்பட்ட கலாக்சேத்ரா நிறுவனம் சென்னை திருவான்மியூரில் இயங்கி வருகிறது. இது ஒரு தன்னாட்சி நிறுவனம் ஆகும். இந்நிறுவனத்தின் ஒரு அங்கமான பெசண்ட் அருந்தைள் சீனியர் செகன்டரி பள்ளியில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் பணியிடம் நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியாகியுள்ளது.

அதன்படி, முதுநிலை ஆசிரியர் (தமிழ்) பணிக்கு ஒரு காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அனைத்து வகுப்பினரும் விண்ணப்பிக்கலாம். தமிழக அரசின் சம்பள விகிதப்படி, மாதம் ரூ.36,900 முதல் ரூ.1,16,600 சம்பளம் வழங்கப்படுகிறது. சம்பளம் தவிர்த்து இதர படிகளும் உண்டு.

முதுநிலை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், தமிழ்த்துறையில் முதுநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், ஆசிரியர் படிப்பில் டிகிரி முடித்திருக்க வேண்டும். மத்திய, மாநில அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 45 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த பணியில் சேருவதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள், www.kalakshetra.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனைப் பூர்த்தி செய்து வரும் ஜனவரி 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். சரியாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, விண்ணப்பதாரர்கள், விண்ணப்பப்படிவத்தை கவனமாக பூர்த்தி செய்யும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தை அனுப்ப வேண்டிய முகவரி: Director, Kalakshetra Foundation, Thiruvanmiyur, Chennai - 600 041

இது பற்றிய முழுமையான விவரங்களுக்கு கலாக்சேத்ரா நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.
Kalakshetra Recruitment 2020: Official Notification For Post Graduate Teacher

அடுத்த செய்தி