ஆப்நகரம்

இப்படி வெளியே வந்தால், TNPSC போன்ற தேர்வுகள் மூலம் அரசு வேலை பெறுவது கஷ்டம்!

TNPSC 2020: ஊரடங்களை மதிக்காமல் வெளியே வந்த 1.63 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் இளையோர்கள் என்பதால், இனி வரும் காலங்களில் TNPSC, RRB, SSC போன்ற அரசுத்தேர்வுகள் எழுதி, பணியில் சேருவதற்கான முன்னுரிமையை இழக்கின்றனர்.

Samayam Tamil 14 Apr 2020, 11:51 am
தமிழகத்தில் ஊரடங்கை உத்தரவை மீறியதாக 1.63 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலான இளைஞர்கள் இனி அரசு பணியில் சேருவதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil TNPSC Exam 2020


கொரோனா வைரஸ் தொற்றுதல் பரவுதலை கட்டுப்படுத்துவதற்காக மார்ச் 24 ஆம் தேி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அத்தியாவசிய தேவை தவிர வேறு எக்காரணத்துக்காகவும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது, அத்தியாவசிய காரணங்களுக்காக வெளியே வருபவர்கள் சமூக விலகலை பின்பற்ற வேண்டும் என்று கடுமையான விதிமுறைகள் பிறப்பிக்கப்பட்டது. அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டது. திருமணம், இறப்பு காரணங்களுக்காக மற்றொரு மாவட்டத்திற்கு செல்ல வேண்டும் என்றால், மாநகராட்சியின் அனுமதி பெற வேண்டும்.

Also Read This:

இவ்வாறு கடுமையான முறைகள் அறிவிக்கப்பட்ட போதிலும், பல இடங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாகவே காணப்பட்டனர். மேலும், பலர் தேவைகளின்றி பைக்கில் ஊர் சுற்றி வந்தனர். இவ்வாறு ஊரடங்கு உத்தரவை மீறியதாக 1 லட்சத்து 75 ஆயிரத்து 6366 பேரை கைது செய்து விடுவித்தினர். மொத்தம் 1 லட்சத்து 63 ஆயிரத்து 477 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 1 லட்சத்து 39 ஆயிரத்து 8 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த சூழலில் வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள் என்பதால், அவர்களுக்கு எதிர்காலத்தில் அரசு வேலை கிடைப்பதற்கு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் அரசுத்துறைகளில் உள்ள காலியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் மூலமாக நிரப்பப்பட்டு வருகிறது. ஒரு சில துறைகளில் மட்டும் நேரடி நியமனம் நடைபெறுகிறது.

போட்டித்தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால், வெறும் மதிப்பெண்னை மட்டும் பார்த்து ஆட்கள் தெரிவு செய்யப்படுவதில்லை. போட்டித் தேர்வு மதிப்பெண் முறையோடு சேர்த்து, அவர்களுடைய பள்ளித்தேர்வு மதிப்பெண், முன்னுரிமை சலுகை, குற்ற வழக்குகள் ஏதும் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை எல்லாம் பார்த்து, அதன் அடிப்படையில் அரசுப் பணிக்கு நியமனம் நடைபெற்று வருகிறது.

தற்போது ஊரடங்கு உத்தரவை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட இளைஞர்கள், அடுத்ததாக அரசுப்பணி தேர்வு எழுதும் போது, முன்னுரிமை இழக்கின்றனர். போட்டித்தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றாலும், வழக்குப்பதிவு இருந்த ஒரே காரணத்தினால், வேலைவாய்ப்பு பெறாமல் போவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே, இதனையும் கருத்தில் கொண்டு, கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரத்தையும் உணர்ந்து, தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்தால் நன்றாக இருக்கும்.

அடுத்த செய்தி