ஆப்நகரம்

தமிழ்நாடு தொழில் தீர்ப்பாயத்தில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு தொழில் தீர்ப்பாயத்தில். நிரப்பப்படாமல் உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் அலுவலக உதவியாளருடன் கூடிய முழு நேர காவலர் ஆகிய பணியிடங்களில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

Samayam Tamil 21 May 2019, 1:13 pm
சென்னை. தமிழ்நாடு தொழில் தீர்ப்பாயத்தில். நிரப்பப்படாமல் உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் அலுவலக உதவியாளருடன் கூடிய முழு நேர காவலர் ஆகிய பணியிடங்களில் நியமிக்க கீழ்கண்ட தகுதிகள் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன,
Samayam Tamil தமிழ்நாடு தொழில் தீர்ப்பாயத்தில் வேலைவாய்ப்பு


கீழ்கண்ட பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தின் படி. விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் கீழே குறிப்பிட்டுள்ள சான்றிதழ்களின் நகல்களுடன் பதிவு அஞ்சல் ஒப்புகை அட்டையுடன் கூடிய சுய விலாசமிட்ட ரூ.25 க்கான அஞ்சல் வில்லை ஒட்டிய கவர் ஒன்றுடன் விண்ணப்பத்தினை 31.05.2019 தேதி மாலை 5,45 மணிக்குள் தலைமை தாங்கும் அலுவலர். தொழில் தீர்ப்பாயம். (தமிழ்நாடு). மாநகர உரிமையியல் நீதிமன்ற கட்டிடம். 2 வது மாடி. சென்னை - 600 104 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள் எக்காரணத்தைக் கொண்டும் நேரில் பெறப்பட மாட்டாது, 31.05.2019 ம் தேதி மாலை 5,45 மணிக்குப் பின் வரும் விண்ணப்பங்களும் சரிவர பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்களும். தக்க சான்றிதழ்கள் இணைக்கப்படாமல் அனுப்பப்படும் விண்ணப்பங்களும் ஏற்கப்படமாட்டாது. சான்றிதழ்கள் பரிசீலனைக்கு பின்னரே நேர்காணலுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.

பதவி: அலுவலக உதவியாளர்
சம்பளம்: 15,700 – 50,000 ரூபாய்
வயது: குறைந்தபட்சம் 18
கல்வித்தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி
காலியிடங்கள்: 1

பதவி 2: அலுவலக உதவியாளருடன் கூடிய முழுநேர காவலர்
சம்பளம்: 15,700 – 50,000 ரூபாய்
வயது: குறைந்தபட்சம் 18
கல்வித்தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி
காலியிடங்கள்: 1

இது தொடர்பான முழுமையான விபரங்களுக்கும், விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்வதற்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.
https://districts.ecourts.gov.in/sites/default/files/Application%20Instructions.pdf

அடுத்த செய்தி