ஆப்நகரம்

10வது படிச்சிருந்தாலே போதும்! தமிழ்நாடு அரசின் இலவச டிரோன் ஓட்டுநர் பயிற்சி, ஒரு நாளைக்கே 15,000 சம்பளமாம்!

தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் சார்பாக டிரோன் பயன்படுத்தி விவசாயத்தில் உதவி செய்யும் பணிக்கான இலவச பயிற்சி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டிரோன் பயிற்சி வழங்கப்பட்டு பத்தாண்டுகள் உரிமமும், தொழில் துவங்குவதற்கான உதவியும் செய்யப்படும் என TAHDCO தெரிவித்துள்ளது.

Authored byசுபாஷ் சந்திர போஸ் | Samayam Tamil 5 Jan 2023, 3:15 pm
பல்வேறு நாடுகளிலும் விவசாயத்துறையில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பலவிதமான புரட்சிகளை செய்து வருகின்றனர். அதில் முக்கியமானது டிரோன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மருந்து தெளித்தல், கண்காணித்தல், அறுவடைக்கு உதவுதல், மேப்பிங் உள்ளிட்ட பல்வேறு வேலைகளை செய்வது. தற்போது இந்தியாவும் அந்த தொழில்நுட்பத்தை கொண்டு பல இடங்களில் விவசாயம் செய்து வருகிறது.
Samayam Tamil TAHDCO drone training


இந்த வாய்ப்பை பயன்படுத்தி தமிழக இளைஞர்களுக்கு விண்வெளி ஆராய்ச்சி மையம், MIT, அண்ணா பல்கலைக்கழகம் மூலம் டிரோன் பயிற்சி அளித்து அவர்களையும் தொழில்முனைவோர்களாக மாற்றவும், விவசாயத்திற்கு உதவும் நோக்கிலும் தமிழக ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் SC/ST வகுப்புகளை சார்ந்த இளைஞர்களுக்கு பயிற்சி கொடுக்கப்படவுள்ளது. இந்த பயிற்சியில் சேருவதற்கு என்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்று அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

கல்வி தகுதி

குறைந்தபட்சம் 10வது முடித்திருக்க வேண்டும். டிப்ளமோ, ஐடிஐ , டிகிரி, இன்ஜினியரிங் முடித்தவர்கள் கூட விண்ணப்பிக்கலாம்.

பிரிவு

SC/ST வகுப்புகளை சார்ந்தவர்கள் மட்டும்.

வயது வரம்பு

18 முதல் 45 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்க முடியும்.

தேவையான ஆவணங்கள்

அதிகாரப்பூர்வ இந்திய பாஸ்போர்ட் இருக்க வேண்டும். மெடிக்கல் ஃபிட்னெஸ் சான்றிதழ் இருக்க வேண்டும்.

சம்பளம்

பயிற்சி முடித்து ஒருவர் தனியாக இந்த தொழிலை செய்ய துவங்கினால் ஒரு நாளைக்கு 10000 முதல் 15000 வரை சம்பாதிக்க முடியும்.

எப்படி விண்ணப்பிப்பது?

  • இந்த பயிற்சிக்கு ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தமிழக ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tahdco.com செல்ல வேண்டும்.
  • முகப்பில் தெரியும் டிரோன் பயிற்சி நோட்டிஃபிகேஷன் மீது க்ளிக் செய்தால் விண்ணப்ப பக்கத்திற்கு அது அழைத்து செல்லும்.
  • அங்கே கேட்கப்பட்டிருக்கும் தகவல்களை சரியா பூர்த்தி செய்து சப்மிட் செய்யவும். குறிப்பாக உங்கள் பாஸ்போர்ட் எண் உங்களிடம் இருக்க வேண்டும்.
  • பின் உங்களின் முழுவிவரம் மற்றும் இதர கல்வி சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை கேட்கும். தவறின்றி அதையும் அப்லோட் செய்துவிட்டு ரெஜிஸ்டர் கொடுத்து விடவும்.

பயிற்சி குறிப்புகள்

  • 10 நாட்கள் பயிற்சி வழங்கப்படும். இந்த பயிற்சிக்கு ஆகும் 61,100 ருபாய் கட்டணத்தை அரசே ஏற்றுக் கொள்ளும்.
  • பயிற்சி முடிந்தவுடன் டிரோன் ஓட்டுநருக்கான உரிமம் DGCA அங்கீகாரத்துடன் MIT வழியாக 10 வருட வேலிடிட்டியோடு கிடைக்கும்.
  • பயிற்சிக்கு பிறகு சொந்த காசில் டிரோன் வாங்கி கொள்ளலாம். TAHDCO நிதி உதவி வேண்டுமென்றால் அதுவும் செய்து தரப்படும்.
  • “Uzhavan” செயலியை பயன்படுத்தி உங்கள் வணிகத்தை நீங்கள் பெருக்கி கொள்ளலாம்.
  • டிரோன் வாங்க தனியார் வங்கிகள் மூலம் 2.25 லட்சம் வரை கடன் வாங்க TAHDCO உதவி புரியும்.
எழுத்தாளர் பற்றி
சுபாஷ் சந்திர போஸ்
சுபாஷ் கடந்த நான்கு வருடங்களாக ஊடகத்துறையின் முன்னணி டிஜிட்டல் தளங்களில் கான்டென்ட் எழுதுபவராகவும் மற்றும் செய்தி நிறுவனங்களில் கள நிருபராகவும் பணியாற்றிய அனுபவமுள்ளவர். இயல்பில் எந்த துறை சார்ந்து எழுதும் ஆர்வம் கொண்ட சுபாஷ் தற்போது கல்வி, ஆரோக்கியம், உறவுகள் குறித்து எழுதி வருகிறார். அரசியல் மற்றும் உறவுகள் குறித்த துறையில் ஆர்வம் மிக்கவர். அவர் ஒரு lepidopterist, bibliophile மற்றும் anthophile ஆவார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி