ஆப்நகரம்

மீன்வளத்துறையில் உதவியாளர் வேலை!

திருச்சி அசூர் மீன்பண்ணையில் காலியாக உள்ள மீன்வள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

Samayam Tamil 11 Mar 2020, 10:57 pm
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து மார்ச் 3 ஆம் தேதியிட்ட வேலைவாய்ப்பு அறிவிக்கை வெளியாகியுள்ளது. அதன்படி, மீன்வளத்துறையில் அசூர் மீன்பண்ணையில் இரண்டு மீன்வள உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இது தொடர்பான அறிவிக்கை ஏற்கனவே கடந்த ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகியிருந்தது. அதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு தற்போது புதிய அறிவிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது.
Samayam Tamil TN Fisheries Recruitment 2020


மீன்வள உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். அதிகபட்சமாக மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் 32 வயதுக்குள்ளாக இருக்க வேண்டம். ஆதிதிராவிடர், அருந்ததியினர் பிரிவினர் 35 வயதுக்குப்பட்டவராக இருக்க வேண்டும்.

நாமக்கல் கூட்டுறவு நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு!

விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுதபடிக்க தெரிந்திருக்க வேண்டும். நீச்சல், வலை பின்னுதல், அறுந்த வலைகளை சரி செய்ய, வலை வீச தெரிந்திருக்க வேண்டும். மீனவர் பயிற்சி சான்றிதழ் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இதற்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள், வரும் ஏப்ரல் 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி,
மீன்வளத்துணை இயக்குநர் (மண்டலம்),
திருச்சி 17/2, சமது பள்ளித்தெரு, காஜா நகர்,
திருச்சி - 620020

வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் பார்க்க இங்கு க்ளிக் செய்யவும்

அடுத்த செய்தி