ஆப்நகரம்

TN Govt Job: 5ம் வகுப்பு படித்திருந்தால் போதும், கிராம உதவியாளர் வேலை!

தஞ்சாவூர் வட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

Samayam Tamil 6 Sep 2019, 3:49 pm
தமிழகத்தில் தற்போது கூட்டுறவு சங்கங்களில் உதவியாளர் பணியிடங்கள் மாவட்ட வாரியாக நிரப்பப்பட்டு வருகிறது. தற்போது அதே போன்று வட்ட அலுவலகங்களில் அதாவது தாலுகா வாரியாக கிராம உதவியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
Samayam Tamil village assitant


தஞ்சாவூர் வட்டத்தில் 3 கிராமங்களும், பட்டுக்கோட்டை வட்டத்தில் 15 கிராமங்களிலும் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. தஞ்சாவூர் வட்டத்தின் கீழ் பிள்ளையார்நத்தம், குருங்களூர், மருங்குளம் ஆகிய கிராமங்களில் பணியிடங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலூரில் தமிழக அரசு வேலை! பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

இதே போன்று பட்டுக்கோட்டை வட்டத்தில் பாலத்தளி, ஒட்டங்காடு, மகிழங்கோட்டை, ராஜாமடம், சின்ன ஆவுடையார்கோவில், புதுக்கோட்டகம், பரக்கலக்கோட்டை, கன்னியாக்குறிச்சி, விக்ரமம், சிரமேல்குடி, வேப்பங்குளம், தளிக்கோட்டை, ஆலத்தூர், பண்ணைவயல், கூத்தாடிவயல் ஆகிய கிராமங்களுக்கு கிராம உதவியாளர் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்தாம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றவர்கள் அல்லது பத்தாம் வகுப்பு தோல்வியடைந்தவர்கள் கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணியில் சேருவதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், அந்தந்த வட்ட அலுவலகங்களில் (தாலுகா அலுவலகம்) நேரடியாக விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பத்தை பூர்த்தி செய்து புகைப்படம், கல்விச்சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு வரும் செப்டம்பர் 17ம் தேதி கடைசி நாளாகும். டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்கள் கிராம உதவியாளர் பணிக்கும் விண்ணப்பிக்கலாம்.

திருவள்ளூர் மத்திய கூட்டுறவு சங்கங்களில் தமிழக அரசு வேலை!

இனசுழற்சி அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இது தொடர்பான விரிவான விபரங்களுக்கு அந்தந்த தாலுகா அலுவலகத்துக்குச் சென்று அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

அடுத்த செய்தி