தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), போட்டித் தேர்வு எழுத விரும்புவோர் நலனுக்காக ஒருங்கிணைந்த மொபைல் செயலியை (Mobile App) தமிழக அரசு அறிமுகப்படுத்தும் என மாநில நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாக ராஜன் தெரிவித்துள்ளார். அதில், முக்கியமான அறிவிப்புகள் , பாடத்திட்டம், சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல்கள் மற்றும் தேர்வு முடிவுகள் பற்றிய தகவல்களை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவையான ஊழியர்களை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission - TNPSC) மூலம் அரசு தேர்வு செய்து வருகிறது. திறமையான ஊழியர்களை கண்டறிய பல்வேறு போட்டித்தேர்வுகள் மற்றும் நேர்காணல் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகின்றனர். அரசு பணிகளின் அடிப்படையில் இந்த தேர்வுகள் குரூப் 1, குரூப் 2, குரூப் 3 மற்றும் குரூப் 4 மற்றும் குரூப் 5,6,7,8 ஆகிய தேர்வுகள் நடத்தப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ் 'சமயம் தமிழ்' பக்கத்தை பின் தொடருங்கள்....
அரசு தகுதி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க இயல்பாகவே அந்தந்த இணையதள முகவரிக்கு தான் செல்லவேண்டும். அதிலும் நாம் அந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்குள் ஏற்படும் பல்வேறு இன்னல்களால் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான ஆர்வமும் பொறுமையும் போய்விடும். இந்நிலையில், விண்ணப்பதாரர்களின் சிரமத்தை குறைக்க ஒரு கைபேசி செயலி அறிமுகப்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த புதிய செயலி மூலம் TNPSC ஆட்சேர்ப்பு, ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு வாரியம் (TRB) , மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் மற்றும் தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர்கள் ஆட்சேர்ப்புக் குழு ( TNFUSRC ) பற்றிய தகவல்களையும் இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த ஆண்டு குரூப் 2 தேர்வு மே 21 ஆம் தேதியும், குரூப் 4 தேர்வு ஜூலை 2 ஆம் தேதியும் நடைபெற உள்ளது. இதுகுறித்த புதியஅப்டேட்களுக்கு நமது இணையதளப்பாக்கத்தை பார்வையிடவும்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ் 'சமயம் தமிழ்' பக்கத்தை பின் தொடருங்கள்....
அரசு தகுதி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க இயல்பாகவே அந்தந்த இணையதள முகவரிக்கு தான் செல்லவேண்டும். அதிலும் நாம் அந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்குள் ஏற்படும் பல்வேறு இன்னல்களால் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான ஆர்வமும் பொறுமையும் போய்விடும். இந்நிலையில், விண்ணப்பதாரர்களின் சிரமத்தை குறைக்க ஒரு கைபேசி செயலி அறிமுகப்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த புதிய செயலி மூலம் TNPSC ஆட்சேர்ப்பு, ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு வாரியம் (TRB) , மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் மற்றும் தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர்கள் ஆட்சேர்ப்புக் குழு ( TNFUSRC ) பற்றிய தகவல்களையும் இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த ஆண்டு குரூப் 2 தேர்வு மே 21 ஆம் தேதியும், குரூப் 4 தேர்வு ஜூலை 2 ஆம் தேதியும் நடைபெற உள்ளது. இதுகுறித்த புதியஅப்டேட்களுக்கு நமது இணையதளப்பாக்கத்தை பார்வையிடவும்.