ஆப்நகரம்

சட்டப்பல்கலைக்கழகத்தில் ஆசிரியர், நூலகர் பணியிடங்கள்.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..

தமிழ்நாடு தேசிய சட்டப்பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு ஆசிரியர், ஆசிரியர்கள் அல்லாத பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இது பற்றிய விபரம் பின்வருமாறு:

Samayam Tamil 24 Sep 2019, 12:16 pm
தமிழ்நாடு சட்டப்பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பேராசிரியர், இணைப்பேராசிரியர், உதவிப்பேராசிரியர், நூலகர், உதவி நூலகர் பணிக்கு விண்ணப்பிங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு நாளைக்குள் விண்ணப்பம் சென்று சேர வேண்டும்.
Samayam Tamil TNLU Recruitment 2019


மொத்தம் 23 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 2 பேராசிரியர்கள் (சட்டம்), 4 இணைப்பேராசிரியர்கள் (சட்டம்), 12 உதவிப்பேராசிரியர்கள் (சட்டம்) உள்ளது. இதே போல், ஆங்கிலம், பொருளாதாரம், வரலாறு ஆகிய துறைகளுக்கு இணைப்பேராசிரியர் பணியிடங்கள் தலா 1 அறிவிக்கப்பட்டுள்ளது. 1 நூலகர், 1 உதவி நூலகர் பணிகளும் உள்ளது.

(வேலை.. வேலை.. அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை!)


பேராசிரியர் பணிக்கு பி.ஹெச்டி முடித்திருக்க வேண்டும். குறைந்தது பத்து வருடங்கள் உதவிப்பேராசிரியர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இணைப்பேராசிரியர் பணிக்கு 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். எட்டு வருடங்கள் துறை ரீதியான அனுபவம் இருக்க வேண்டும். உதவிப்பேராசிரியர் பணிக்கு 55% மதிப்பெண்களுடன் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். NET/SLET தேர்வு தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும். விரிவான கல்வித்தகுதி விபரங்கள் tnnlu.ac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

பி.இ முடித்தவர்களுக்கு மத்திய அரசு நிறுவனத்தில் தொழில்நுட்ப அலுவலர் வேலை!
மேற்கண்ட பணியில் சேருவதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை Vice-Chancellor, Tamil Nadu National Law University, Tiruchirappalli - 620 027 என்ற முகவரிக்கு நாளைக்குள் (செப்டம்பர் 25) கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பப் படிவம் tnnlu.ac.in என்ற இணையதளத்தில் கிடைக்கும்.

இஸ்ரோவில் வேலைவாய்ப்பு.. பணியிடம்: திருநெல்வேலி!
இது பற்றிய முழுமையான விபரங்களுக்கு தமிழ்நாடு தேசிய சட்டப்பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்:
1. வேலைவாய்ப்பு அறிவிப்பு
2. பொதுவான வழிமுறை
3. குறைந்தபட்ச தகுதிகள்
4. விண்ணப்பப் படிவம்

அடுத்த செய்தி