ஆப்நகரம்

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 கவுன்சலிங் ஒத்திவைப்பு!

TNPSC Group 4 CV Postponed: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள், கலந்தாய்வு ஆகியவை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இது பற்றிய விவரங்களை இங்கு காணலாம்.

Samayam Tamil 18 Mar 2020, 5:03 pm
கொரோனா வைரஸ் பரவுதல் தடுப்பு நடவடிக்கையாக டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 கலந்தாய்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஒத்தி வைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் வெளியான செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
Samayam Tamil TNPSC


‘தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான தேர்வு –IV (தொகுதி-IVல் அடங்கிய பதவிகள்) 2018-2019 மற்றும் 2019-2020 (Combined Civil Services Examination-IV (Group-IV Services) இல் அடங்கிய தட்டச்சர் பதவிக்கு 20.03.2020 முதல் 31.03.2020 வரையும், மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-III பதவிக்கு 02.04.2020 முதல் 07.04.2020 வரையும் மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடைபெறும் என அறிவித்திருந்தது.

Also Read This:

இந்நிலையில், மத்திய அரசு, கொரோனா வைரஸ் நோய் தொற்றை ஒரு தேசிய பேரிடராக அறிவிக்கை செய்துள்ளது. தமிழக அரசு கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க எடுத்து வரும் பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது.

இதனை கருத்தில் கொண்டும், மேற்படி நாட்களில் நடைபெறுவதாக இருந்த தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-III ஆகிய பதவிகளுக்கான மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வானது தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கான மாற்று தேதியானது பின்னர் அறிவிக்கப்படும் . மேலும், இதுகுறித்து விண்ணப்பதாரர்களுக்கு SMS மற்றும் email மூலமாக தனியே தகவல் தெரிவிக்கப்படும்’ இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tnpsc.gov.in/press/2020_20_PressRelease.pdf

அடுத்த செய்தி