ஆப்நகரம்

TN Govt jobs: தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்தால் போதும்.. ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் தமிழக அரசு வேலை!

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள், தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்தால் போதும். 15 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் தமிழக அரசு வேலை காத்திருக்கிறது. உடனே விண்ணப்பிக்கவும்.

Samayam Tamil 23 Oct 2019, 4:59 pm
வேலூரில் உண்டு உறைவிடப் பள்ளிகளில் சமையலர், துப்புரவாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு யார் யார் விண்ணப்பிக்கலாம், எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பது பற்றிய விபரங்களை இங்கு காணலாம்.
Samayam Tamil Vellore Collector Office


காலியிடங்கள்:
வேலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் உண்டு, உறைவிடப் பள்ளிகள், விடுதிகள் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளில் தற்போது 112 சமையலர் பணி, 26 தொகுப்பூதிய துப்புரவாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. சமையலர் பணி காலியிடங்களில் 83 பணியிடங்கள் ஆதிதிராவிடர் நலத்துறை, 29 சமையலர் பணியிடங்கள் பழங்குடியினர் துறையின் கீழ் வருகிறது.

TNUSRB: சீருடைப் பணியாளர் தேர்வு மதிப்பெண் பட்டியல் வெளியீடு!

தகுதிகள்:
இந்த சமையலர் பணிக்கு விண்ணப்பதாரர்கள் தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்தால் போதுமானது. அதிகபட்சமாக 10ம் வகுப்பு தோல்வி அடைந்திருக்க வேண்டும். செப்டம்பர் 1ம் தேதி கணக்கின்படி, விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயதும், அதிகபட்சம் 35 வயதுக்குள்ளாகவும் இருக்க வேண்டும். குறிப்பிட்டவர்களுக்கு அரசு விதிமுறைகளின்படி, வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னுரிமை :
வேலூர் மாவட்டத்திலேயே இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஆதிதிராவிடர், பழங்குடியினராகவும், சைவ, அசைவ சமையல் நல்ல சுவையாக சமைக்த் தெரிந்திருப்பவராக இருந்தால் முன்னுரிமை உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பளம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளி, விடுதிகளில் பணியமர்த்தப்படுவர். சமையலர் பணிக்கு அடிப்படை ஊதியம் மற்றும் இதர படிகளாக, ரூ. 15,700 முதல் ரூ. 50,000 வரையில் வழங்கப்படும்.

TANGEDCO Job: தமிழ்நாடு மின்வாரியத்தில் எக்கச்சக்க வேலைவாய்ப்புகள் அறிவிப்பு!
விண்ணப்பம்:
இந்த பணிகளில் சேருவதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று, அதனை பூர்த்தி செய்து அக்டோபர் 18ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரடியாகவோ, பதிவஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.

இது பற்றிய முழுமையான விபரங்களுக்கு வேலூர் ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பைப் பார்க்கவும்:
https://cdn.s3waas.gov.in/s31651cf0d2f737d7adeab84d339dbabd3/uploads/2019/10/2019100484.pdf
vellore Adi Dravidar and Tribal Welfare Department Recruitment Notification 2019: Click Here to download

அடுத்த செய்தி