ஆப்நகரம்

ஐந்தாம் வகுப்பு படித்திருந்தால் போதும் ரூ. 15,000 சம்பளத்தில் அரசு வேலை

விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள 52 காலிப் பணியிடங்களுக்கு, தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Samayam Tamil 11 Mar 2019, 9:27 am
விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாகவுள்ள 52 பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Samayam Tamil 5ம் வகுப்பு படித்தவர்களுக்கு ரூ. 15,000 ஊதியத்தில் அரசு வேலை
5ம் வகுப்பு படித்தவர்களுக்கு ரூ. 15,000 ஊதியத்தில் அரசு வேலை


விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்துக்கான பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர், இரவு காவலர், துப்புரவுப் பணியாளர் உள்ளிட்ட காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அதன்படி, பதிவறை எழுத்தர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 10ஆம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் 5ம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், அவர்களிடம் ஓட்டுநர் உரிமம் இருப்பது அவசியம்.

இரவு காவலர் பணிக்கும், துப்புரவுப் பணியாளர்களுக்கும் விண்ணப்பிக்க கூடியவர்கள் 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வேலைகளின் அடிப்படையில் மாதம் ரு. 15,700 முதல் ரூ.50,000 வரை ஊதியம் வரையறுக்கப்பட்டுள்ளது.

மேல் கூறப்பட்ட பணிக்கு வயது வரம்பு 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும். எழுத்துத் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விருப்பம் உள்ளவர்கள், விண்ணப்பங்களை www.districts.ecourts.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, கேட்கப்பட்டுள்ள சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, அவற்றில் சுயமாக கையெழுத்திட வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம், விழுப்புரம் என்ற முகவரிக்கு மார்ச் 18ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

இதுகுறித்து மேலும் விவரங்கள் அறிய http://www.districts.ecourts.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளவும்.

அடுத்த செய்தி