இண்டிகோ ராஜாங்கத்தை அவர் எவ்வாறு கட்டமைத்தார்?
விமான உரிமம் 2004 இல் வாங்கப்பட்டது, ஆனால் நிறுவனம் 2006 வரை தயாராகவில்லை!
இண்டிகோ நிறுவனமானது இன்டர் குளோப் எண்டர்பிரைசஸின் ராகுல் பாட்டியா மற்றும் கைலம் இன்வெஸ்ட்மென்ட்ஸின் ராகேஷ் கங்வால் ஆகியோரால் இணைந்து உருவாக்கப்பட்ட நிறுவனமாகும்.இன்டர் குளோப் 51.12% பங்குகளையும், சீலம் இன்வெஸ்ட்மென்ட்ஸ் 48% பங்குகளையும் இண்டிகோவில் வைத்திருந்தன.
விமான எரிபொருள் விலைகள் உயர்ந்து, ரூபாய் வீழ்ச்சியடைந்த நிலையில், அந்த நாள்கள் இந்திய விமானத் தொழிலுக்கு மிகவும் கடினமான நாட்கள். விமானத் துறையின் ஜாம்பவான்களான கிங்பிஷர் ஏர்லைன்ஸ், ஸ்பைஸ்ஜெட் மற்றும் ஜெட் போன்ற நிறுவனர்கள் பணத்தை இழந்துக் கொண்டிருந்த போது, ராகுல் அத்தகைய நேரத்தில் சந்தையில் நுழைய ஒரு துணிச்சலானஎ நடவடிக்கை எடுத்தார்.
அந்த நேரத்தில், அவர் தலைப்புச் செய்திகளை உருவாக்கியதோடு எல்லோரையும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தினார். இக்கட்டான அக்காலகட்டத்தில்100 ஏர் பஸ்களையும் ஏ320-200 விமானங்களையும் 2005 ஆம் ஆண்டில் பாரிஸ் ஏர் ஷோவில் 6.5 பில்லியன் டாலருக்கு ஆர்டர் செய்தார். அந்த நேரத்தில் இண்டிகோ கூட தொடங்கப்படவில்லை
விமான சேவை
ராகுலும் அவரது தந்தையும் ஒரு விமான சேவையைத் தொடங்குவது பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர், ஆனால் அந்த நேரத்தில் தொழில்துறையில் இழப்பு விகிதம் அதிகமாக இருந்ததால், ராகேஷ் இந்த தொழிலில் இறங்க மிகவும் தயங்கினார்.
அவர் தன்னுடைய முடிவிலும் உறுதியாக இருந்தார், ஆனால் ராகேஷ் சமாதானமாகும் வரை ராகுல் காத்திருந்தார். அவருக்கு நம்பிக்கை கிடைத்தவுடன், இருவரும் சேர்ந்து 2004 ஆம் ஆண்டில் விமான உரிமத்திற்கு விண்ணப்பித்து இண்டிகோ ஏர்லைன்ஸைத் தொடங்கினர்!
Rahul Bhatia Indigo Airlines
3.6 பில்லியன் டாலர் நிகர சொத்து மதிப்புடன் ராகுல் பாட்டியா இந்தியாவின் 38 வது பணக்காரராக உள்ளார். இண்டிகோவின் இன்டர் குளோப் எண்டர்பிரைசஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தின் நிறுவனர் ஆவார். இது இந்தியாவின் மிகப்பெரிய அதிக லாபம் கொடுக்கும் விமான நிறுவனமாகும்.
கனடாவின் ஒன்டாரியோவில் வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் மின் பொறியியல் பட்டம் பெற்றவர். அவரின் முதன்மையான மூன்று தொழில்கள்:
மூன்று தொழில்கள்
இன்டர் குளோப் ஹோட்டல்:
இது 2004 ஆம் ஆண்டு முதல் பிரெஞ்சு விருந்தோம்பல் குழு “அக்கார்” நிறுவனத்துடன் இணைந்து “ஐபிஐஎஸ்” ஹோட்டல்களை இணைக்கும் நிறுவனத்தை நிறுவினார்.
40 நாடுகளில் 850 ஐபிஐஎஸ்எஸின் ஹோட்டல்கள் உள்ளன. முதல் மற்றும் இரண்டாம் தர நகரங்கள் அவற்றின் முக்கிய இலக்குகளாகும், இது முக்கிய தொழில் மாவட்டங்கள் அனைத்திலும் பெரும்பாலும் உள்ளது.
இண்டிகோ ஏர்லைன்ஸ்:
இது ராகுலின் மிக வெற்றிகரமான தொழிலாகும், இந்த தொழிலால் அவர் நிறைய புகழ், அங்கீகாரம் மற்றும் பாராட்டுகளைப் பெற்றார்!
இன்டர் குளோப் டெக்னாலஜிஸ்:
இது அவரின் தகவல் தொழில்நுட்ப சேவை மற்றும் பிபிஓ (பிசினஸ் பிராசஸ் அவுட்சோர்சிங்) நிறுவனம், இது பயணம், போக்குவரத்து மற்றும் விருந்தோம்பல் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றது. இவற்றைத் தவிர, உணவு விரும்பியான ராகுல் பல உணவகங்களையும் வைத்திருக்கிறார்.
மேலும் பல நிறுவனங்கள்
இது தவிர, அவர் குழுமத்தின் மூலமாக பல நிறுவனங்களை வைத்துள்ளார்:
அதில், இன்டர் குளோப் டெக்னாலஜி கோட்டியண்ட் பிரைவேட் லிமிடெட், இன்டர் குளோப் ஏவியேஷன் லிமிடெட், இன்டர் குளோப் ஏவியேஷன் பிரைவேட் லிமிடெட், அக்வைர் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட், பாரத் டெலிகாம் லிமிடெட், இன்டர் குளோப் பவுண்டேஷன், இன்டர் குளோப் எஜுகேஷன் சர்வீசஸ் லிமிடெட், இன்டர் குளோப் எஸ்டாபிலிஸ்ட்பிரைவேட் லிமிடெட், இன்டர் குளோப் லக்சரி பிராடக்ட்ல் பிரைவேட் லிமிடெட், இன்டர் குளோப் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட், ஐ.டி.க்யூ கன்சல்டன்சி பிரைவேட் லிமிடெட், ஸ்ரீ நாத் ஷேர்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பெகாசஸ் யுடிலிடி மெயிண்டனன்ட் சர்வீஸஸ் பிரைவேட் லிமிடெட் போன்றவை ஆகும்.
ராகுல் ஆளுமை
ராகுல் பாட்டியாவின் ஆளுமையைப் பற்றி சொல்வதென்றால், ராகுல் விமானத் துறையைச் சேர்ந்த மிகச் சில நபர்களில் முக்கியமான ஒருவர். சாதாரண ஆடைகளையும் தொழிலுக்கான சூட்களையும் அணிந்து மிக எளிமையாக இருப்பார். அதோடு அணுகுவதற்கு ஏற்றவாறும் கவனச் சிதறல்களைத் தவிர்த்தும் ஏற்றுக்கொண்ட பணியில் அதிக ஈடுபாட்டுடன் இருந்து தன் தொழில்களை வெற்றிகரமாக நடத்துகிறார்.
மத்திய அரசு நிறுவனத்தில் வேலை! பி.இ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!
வேலையில்லா திண்டாட்டம் 7.78% அதிகரிப்பு!
ராகுல் பாண்டியாவின் ஆரம்பகால வாழ்க்கை எப்படி இருந்தது?
டிராவல் தொழில் ராகுலின் முதல் தேர்வாக ஒருபோதும் இருக்கவில்லை!
தனது பட்டப்படிப்பை முடித்த பின்னர் இந்தியா வந்த ராகுல் டிஜிட்டல் தொலைபேசி பரிமாற்றங்களை மேற்கொள்வதற்காக நார்டலுடன் ஒரு தொலைத் தொடர்பு நிறுவனத்தை அமைக்கும் நோக்கத்துடன் இருந்தார்.
ஆனால் அந்த நேரத்தில் அரசாங்கம் வெளிநாட்டு தொழில்நுட்பத்தை ஆதரிக்கவில்லை என்பதால், அந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரவில்லை. அந்த நேரத்தில், ராகுலின் தந்தை டெல்லி எக்ஸ்பிரஸ் என்ற விமான நிறுவனத்தை நடத்தி வந்தார், அவர் 1964 இல் ஒன்பது கூட்டாளர்களுடன் இணைந்து அந்நிறுவனத்தைத் தொடங்கியிருந்தார்.
தொழிலில் முழு நேரமாக இறங்க முடிவு
அனைத்து பிரச்சனைகளும் ஒருசேர வருவதைக் கண்ட ராகுல் தொழிலில் முழு நேரமாக இறங்க முடிவு செய்தார். அதோடு 37000 டாலர் முதலீட்டில் ஒரு நிறுவனத்தைத் தொடங்க ஏற்பாடு செய்தார். அந்த நேரத்தில் அவருக்குத் தொழிலில் பெரிதாக அனுபவம் எதுவும் இல்லை. அவரிடம் இருந்தது IBMல் இரண்டு ஆண்டு பட்டய அனுபவம் மட்டும் தான். அந்த அனுபவத்தில் இன்டர் குளோப் நிறுவனத்தைத் தொடங்கினார்.
1991 ஆம் ஆண்டு
இருப்பினும், ராகுல் ஆசிரியராக தனது தொழில் இருக்க வேண்டும் என்று விரும்பினார், தனது தந்தையினுடைய உடல்நிலையின் காரணமாக 1988 இல் குடும்பத் தொழிலில் ஈடுபட வேண்டிய உணர்ச்சிபூர்வமான நிலைக்கு வந்தார். 1991 ஆம் ஆண்டு வாக்கில், ராகுலும் அவரது தந்தையும் இந்த நிறுவனத்தில் சில பங்குதாரர்களின் பங்குகளை ரகசியமாக பெறுவதாக மற்றவர்கள் குற்றஞ்சாட்டினார். மேலும் இவரையும் இவரது தந்தையும் நிறுவனத்தை விட்டு வெறுயேறுமாறு கேட்டுக் கொண்டனர்.
பண நெருக்கடி
ஆனால் இன்டர் குளோப் அப்போது இண்டிகோவாக இல்லை.அது அப்போது இன்டர் குளோப் டெக்னாலஜிஸ் என்றே வழங்கப்பட்டது. இது அவர்களின் தகவல் தொழில்நுட்ப சேவைகள் மற்றும் பிபிஓ பணிகளை மேற்கொண்டது. இது முக்கியமாக பயணம், போக்குவரத்து மற்றும் விருந்தோம்பல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி அதில் சிறந்து விளங்கியது.
கடினமான காலக்கட்டத்தில், பண நெருக்கடிகளுடன் தொடங்கப்பட்டு செயல்பட்டது. ஆனால், அவருடைய தொடர்புகளின் பலத்தினால் வெற்றி பெற முடிந்தது அதோடுபழைய நிறுவனத்துடன் வர்த்தகம் செய்த அனைத்து விமான நிறுவனங்களும் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் இன்டர் குளோபிற்கு சென்றன.
அகில இந்திய உரிமை
1994 ஆம் ஆண்டில், அவர் கலிலியோ இன்டர்நேஷனல் (விமான முன்பதிவு முறை) என்பதற்காக அகில இந்திய உரிமையையும் பெற முடிந்தது, பின்னர் அவர்களுடன் கூட்டு முயற்சியில் 1999 இல் மறைமுக அலுவலக சேவைகளை வழங்கியது. காலப்போக்கில், பயண தொழில்நுட்பம், விருந்தோம்பல், வணிக ஜெட் மற்றும் சில்லறை விற்பனை போன்றவற்றில் அவர்களுடன் இணைந்து விரிவாக்கம் செய்தார்…!
அதில் இருந்தபோது, ராகேஷ் கங்வாலுடன் (யு.எஸ். ஏர்வேஸ் தலைமை நிர்வாக அதிகாரி) ராகுல் நெருங்கிய நட்பை வளர்த்துக் கொண்டார்.அவர் தனது சொந்த விமான சேவையைத் தொடங்குவதற்கான அடுத்த பாய்ச்சலுக்கு களமிறங்கத் தொடங்கி விட்டார்.