ஆப்நகரம்

ரயில்வே கான்ஸ்டபிள்களுக்கான 798 காலி பணியிடங்கள் திறப்பு: விவரங்கள் உள்ளே…

ஆர்ஆர்பி, ரயில்வே கான்ஸ்டபிள்களுக்கான 798 காலி பணியிடங்களை நிரப்ப உள்ளது. இதுகுறித்த விரிவான விவரங்களை அறிந்துகொள்ள உங்களுக்காக சில தகவல்கள்…

Samayam Tamil 24 Dec 2018, 12:47 pm
ஆர்ஆர்பி, ரயில்வே கான்ஸ்டபிள்களுக்கான 798 காலி பணியிடங்களை நிரப்ப உள்ளது. இதுகுறித்த விரிவான விவரங்களை அறிந்துகொள்ள உங்களுக்காக சில தகவல்கள்…
Samayam Tamil 798 railway constable vacancy opened by rrb details inside
ரயில்வே கான்ஸ்டபிள்களுக்கான 798 காலி பணியிடங்கள் திறப்பு: விவரங்கள் உள்ளே…


ரயில்வே கான்ஸ்டபிள்களுக்கான பணியிடங்களுக்கு, 18-25 வயது வரை உள்ள இளைஞர்களும் யுவதிகளும் 2019, ஜன.,30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரயில்வே புரொடக்‌ஷன் ஃபோர்ஸ் மற்றும் ரயில்வே புரொடக்‌ஷன் ஸ்பெஷல் ஃபோர்ஸ் ஆகிய இரு அமைப்புகளும் லெவல் 2 (சம்பளம்- ரூ. 19,900 முதல் ரூ. 63,2001 வரை) மற்றும் லெவல் 3 (சம்பளம் ரூ. 21,700 முதல் 69,100 வரை) இடங்களை நிரப்ப உள்ளது. படிப்புத்தகுதி: SSLC, matric.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பவர்களுக்கான ஆன்லைன் விண்ணப்பம் ஜன.,1, 2019 காலை 10.00 மணிமுதல் ஜன.,30 இரவு 11.59 வரை விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஆன்லைனின் தேர்வுக் கட்டணத்தை செலுத்தலாம். SC/ST பிரிவினருக்கு ரூ. 250. பிற பிரிவினருக்கு ரூ. 500. எஸ்பிஐ வங்கி சலானிலும் தேர்வுக்கட்டணத்தை அனுப்பலாம்.

இதில் வங்கிக் கட்டணம் தவிர குறிப்பிட்ட தொகை திருப்பி அனுப்பப்படும். விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்ட தகவல்களில் தவறு இருந்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். முன்னாள் இந்திய ராணுவவீரர்களின் வாரிசுகளுக்கு இட ஒதுக்கீடு உண்டு. இதற்கான கணினித் தேர்வு பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி