ஆப்நகரம்

APPLE நிறுவனத்தில் பணிபுரிய ஆசையா? இந்திய இளைஞர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு!

Apple iphone 14 series வெளியாவதற்கு முன்பு இருந்தே இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் தொழிற்சாலை மூலம் ஐபோன் தயாரிப்பது குறித்தான தகவல்கள் பரவி கொண்டிருக்கின்றன. இந்நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் நேரடி ரீட்டைல் ஸ்டோர்கள் இந்தியாவின் முக்கிய நகரங்களில் அமைய உள்ளன. இதில் பல்வேறு வேலைவாய்ப்புகளும் உருவாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Authored byசுபாஷ் சந்திர போஸ் | Samayam Tamil 12 Jan 2023, 12:40 pm
ஆப்பிள் நிறுவனம் இந்தியாவுக்கான தனது வேலைவாய்ப்பு தகவல்கள் பக்கத்தில் புதிய வேலைவாய்ப்புகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அறிவிப்பில் ரீட்டைல் துறையில் பணிபுரிவதற்கான பல விதமான பணிகளுக்கு ஆட்கள் தேவை என கூறப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக அந்தந்த வட்டார மொழிகளிலேயே ஆட்களை வேலைக்கமர்த்த முடிவு செய்திருக்கிறது ஆப்பிள் நிறுவனம்.
Samayam Tamil apple india jobs 2023


அதன் அறிவிப்பில் பிஸ்னஸ் எக்ஸ்பர்ட், எக்ஸ்பர்ட், பிஸ்னஸ் பிஆர்ஓ, கிரியேட்டிவ், ஸ்பெஷலிஸ்ட், ஆபரேஷன்ஸ் எக்ஸ்பர்ட், டெக்னிக்கல் ஸ்பெஷலிஸ்ட், ஜீனியஸ் உள்ளிட்ட வேலைகளுக்கு ஆள் தேவை என ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

ரீட்டைல் ஸ்டோர்கள் இந்தியாவில் பல்வேறு ஊர்களில் அமைய உள்ளதால் அந்தந்த வட்டார மொழியில் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளை தொழில்நுட்ப ரீதியாக வாடிக்கையாளர்களுக்கு விவரிக்க கூடிய திறமை மிக்க நபர்களை ஆப்பிள் வரவேற்கிறது.

ஆப்பிள் நிறுவன தயாரிப்புகள் சார்ந்தும், சிறந்த நிர்வாக மேலாண்மை உள்ளவர்கள், நல்ல தொடர்பு திறன் கொண்டவர்கள், வாடிக்கையாளர்களுடன் நன்றாக தொடர்பு கொள்ள முடிந்தவர்களை வேலைக்கு சேர்க்க தயாராக இருக்கிறது ஆப்பிள் நிறுவனம்.

ஆப்பிள் நிறுவனத்தின் இந்தியாவிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு இணையதளத்துக்குள் சென்று உங்களுக்கு பொருந்தும் பணிக்கான அறிவிப்பை க்ளிக் செய்யவும். அதற்குள் சென்று, தேவையான தகுதிகள் உங்களிடம் இருக்கிறதா என்பதையும், அந்த வேலைக்கான பொறுப்புகள் என்ன என்பதையும் தெரிந்து கொண்டு உங்களின் பயோ டேட்டாவை அதில் சமர்ப்பிக்கவும்.

உங்கள் விவரங்கள் ஆப்பிள் நிறுவனத்தின் விதிகளுக்கும், தகுதிகளுக்கும் பொருந்தும் எனில் நிறுவனம் மூலம் உங்களுக்கு அழைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்தாளர் பற்றி
சுபாஷ் சந்திர போஸ்
சுபாஷ் கடந்த நான்கு வருடங்களாக ஊடகத்துறையின் முன்னணி டிஜிட்டல் தளங்களில் கான்டென்ட் எழுதுபவராகவும் மற்றும் செய்தி நிறுவனங்களில் கள நிருபராகவும் பணியாற்றிய அனுபவமுள்ளவர். இயல்பில் எந்த துறை சார்ந்து எழுதும் ஆர்வம் கொண்ட சுபாஷ் தற்போது கல்வி, ஆரோக்கியம், உறவுகள் குறித்து எழுதி வருகிறார். அரசியல் மற்றும் உறவுகள் குறித்த துறையில் ஆர்வம் மிக்கவர். அவர் ஒரு lepidopterist, bibliophile மற்றும் anthophile ஆவார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி