ஆப்நகரம்

வேலைவாய்ப்பு பதிவு புதுப்பிக்க தவறியவர்களுக்கு 3 மாததிற்குள் புதுப்பிக்க சலுகை அறிவிப்பு

வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்கத் தவறியவர்கள் 3 மாதத்திற்குள் புதுப்பித்துக் கொள்ளும் வகையில் சலுகையை அரசு அறிவித்துள்ளது.

Samayam Tamil 31 Oct 2018, 6:59 pm
வேலைவாய்ப்பு அலுவலத்தில் பதிவு செய்ததை புதுப்பிக்கத் தவறியவர்கள், அரசு வழங்கியுள்ள சலுகை கால அவகாசத்தை பயன்படுட்தி புதுப்பித்துக் கொள்ளும் வகையில் அரசணை வெளியிடப்பட்டுள்ளது.
Samayam Tamil Employment-Exchange


வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் அதை புதுப்பிக்க வேண்டியது அவசியம். அப்படி 2011 முதல் 2016ம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத் தவறியவர்கள், ஆன்லைன் மூலம் புதுப்பித்துக் கொள்ளும் வகையில் சிறப்பு சலுகையை வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதன்படி 1.1.2011 முதல் 31.12.2016 வரை உள்ள காலகட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை புதுப்பிக்க தவறியவர்கள், தமிழக அரசின் அரசாணை வெளியிடப்பட்ட நாளில் இருந்து மூன்று மாதங்களுக்குள் ஆன்லைன் மூலம் தங்கள் பதிவினை புதுப்பித்துக் கொள்ளலாம்.

இந்த சலுகையைப் பயன்படுத்தி புதுப்பித்துக் கொள்ளலாம் என்றும், ஒரே ஒரு முறை மட்டுமே இந்த சலுகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு 2011 ஜனவரி 11-க்கு முன் புதுப்பிக்க தவறியவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி