ஆப்நகரம்

IBPS Clerk Exam: இன்று நடைபெற்ற முதல்நிலைத் தேர்வு- தேர்வர்கள் மகிழ்ச்சி..!!

வங்கியில் கிளர்க் பணியிடங்களுக்கான ஐபிபிஎஸ் முதல்நிலைத் தேர்வு, முதல் பகுதிநேர அடிப்படையில் இன்று நடைபெற்றது.

Samayam Tamil 8 Dec 2018, 3:02 pm
ஐபிபிஎஸ் கிளர்க் முதல்நிலைத் தேர்வு இன்று நடைபெற்றது. முதல் பகுதிநேர அடிப்படையில் நடத்தப்பட்ட தேர்வுக்கான வினாக்கள் கடந்தாண்டை விட எளிதாக இருந்தது என தேர்வு எழுதியவர்கள் கூறியுள்ளனர்.
Samayam Tamil முதல்நிலைத் தேர்வு எளிதாக இருந்தது- தேர்வர்கள் கருத்து


வங்கிப்பணியில் சேர்வதற்கு நடத்தப்படும் தேர்வுகளில் ஐபிபிஎஸ் தேர்வும் ஒன்றாகும். இந்தாண்டு ஐபிபிஎஸ் கிளர்க் தேர்வு இரண்டு தேர்வுகளாக நடத்தப்படுகிறது. இதன் முதல்நிலைத் தேர்வு (Preliminary Exam) டிசம்பர் 8, 9, 15 மற்றும் 16ஆம் தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டது.

அதன்படி இன்று முதல் பகுதிநேர (ஷிஃப்ட்) அடிப்படையில் நடைபெற்ற முதல்நிலைத் தேர்வில் ஆங்கில கேள்விகள், எண் திறன் சார்ந்த கேள்விகள் (Numerical Ability ), பகுத்தறிவு திறன் சார்ந்த கேள்விகள் (Reasoning Ability) எளிதாக கேட்கப்பட்டிருந்தது.

எனினும், அவற்றில் ஆங்கில மொழி திறனை சோதனை செய்யும் கேள்விகள் சற்று கடினமாக இருந்தது என தேர்வு எழுதியவர்கள் கூறியுள்ளனர். மேலும் பிரிவு வாரியாக கேள்விகள் குறித்த விபரங்களும் ஐபிபிஎஸ் இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளன.

இதன் முதன்மைத் தேர்வு (Main Exam) வரும் 2019 ஜனவரி 20ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்களுக்கு தற்காலிக ஒதுக்கீடு 2019 ஏப்ரல் மாதத்தில் நடத்தப்படும்.

தொடக்க நிலையில் ஐபிபிஎஸ் நிர்ணயம் செய்கின்ற கட் ஆப் மதிப்பெண் பெறுகின்றவர்களுக்கு பிரதான தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும். 190 கேள்விகள் உள்ள மெயின் தேர்வுக்கான நேரம் 160 நிமிடங்கள் வழங்கப்படும்.

அடுத்த செய்தி