ஆப்நகரம்

விழுப்புரத்தில் அக்டோபர் 28 வேலைவாய்ப்பு முகாம்

விழுப்புரத்தில் வருகிற சனிக்கிழமை மெகா வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் இளைஞர்கள், வேலைதேடுவோர் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

TNN & Agencies 25 Oct 2017, 11:03 am
விழுப்புரத்தில் வருகிற சனிக்கிழமை மெகா வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் இளைஞர்கள், வேலைதேடுவோர் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
Samayam Tamil job fair in viluppuram at october 28
விழுப்புரத்தில் அக்டோபர் 28 வேலைவாய்ப்பு முகாம்


வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை , மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், விழுப்புரம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் விழுப்புரம் மாவட்டத்தில் தனியார் துறை .வேலைவாய்ப்பு முகாம் விழுப்புரம் காமராஜ் நகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வருகிற 28 ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கி 4 மணிவரை நடைபெற உள்ளது.

இந்த முகாமில் தமிழகத்தை சாந்த 100-க்கும் மேற்பட்ட முன்னணி வேலை அளிக்கும் நிறுவனங் கலந்து கொண்டு , 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

முகாமில்,8 ஆம் வகுப்பு தேர்ச்சி, 10 – ஆம் வகுப்பு மற்றும் +2 தேர்ச்சி , பட்டயப்படிப்பு , பட்டப்படிப்பு ,பொறியியல் உள்ளிட்ட அனைத்து விதமான கல்வித் தகுதி பெற்றவர்களுக்கும் பணிவாய்ப்பு பெற வாய்ப்பு உள்ளது.
முகாமில் கலந்துகொள்ள நினைக்கும் இளைஞர்கள் கல்விசான்றிதழ் மற்றும் அவர்களின் பையோடேட்டா மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றின் நகலை கொண்டு செல்ல வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு இந்த எண்ணை அழைக்கவும் : 04146-226417

job fair in viluppuram at october 28

அடுத்த செய்தி