ஆப்நகரம்

ஆன்லைன் தேர்வு நடத்தலாமா? ஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க உத்தரவு

கணினி ஆசிரியர்களுக்கான தேர்வை மட்டுமே ஆன்லைனில் நடத்த வேண்டும் எனவும் கணினி பயிற்சி இல்லாத பிற ஆசிரியர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த தடை விதிக்க வேண்டும் எனவும் மனு.

Samayam Tamil 17 Jul 2019, 2:08 pm
முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வை ஆன்லைனில் நடத்த தடை கோரிய மனுவுக்கு பதில் அளிக்குமாறு ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil 201808291232315671_Corruption-in-Teachers-Recruitment-board-200-teachers-exam_SECVPF (1)


2018-2019ஆம் ஆண்டுக்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு ஜூன் 12ம் தேதி அறிவிக்கப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் இத்தேர்வு ஆன்லைன் தேர்வாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.


இதனை எதிர்த்து திருப்பூரைச் சேர்ந்த பாலசுப்ரமணியம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தா‌ர். அதில், கணினி ஆசிரியர்களுக்கான தேர்வை மட்டுமே ஆன்லைனில் நடத்த வேண்டும் எனவும் கணினி பயிற்சி இல்லாத பிற ஆசிரியர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த தடை விதிக்க வேண்டும் எனவும் அவர் கோரியிருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதி வி.பார்த்திபன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி ஆசிரியர் தேர்வு வாரியம் வரும் ஜூலை 24ஆம் தேதிக்குள் இந்த மனுவுக்கு பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளார்.


அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் 50 சதவீதம் ஏற்கெனவே பணியல் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது மூலம் நிரப்பப்படுகிறன்றன. மீதி 50 சதவீதம் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித்தேர்வு மூலமும் நிரப்பப்படுகிறது.

கடந்த 2014ஆம் ஆண்டும் 2017ஆம் ஆண்டும் இத்தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது. இந்த ஆண்டும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,144 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் (PG Assistants) மற்றும் உடற்கல்வி இயக்குநர் (Physical Education Directors) நிலை 1 காலிப்பணியிடங்களுக்கு இத்தேர்வு நடக்க உள்ளது.


இத்தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் ஜூன் 24ஆம் தேதி தொடங்கியது. ஜூலை 15ஆம் தேதி மாலை 5.00 மணிக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் நிறைவு பெற்றது.

அடுத்த செய்தி