ஆப்நகரம்

தென்காசி மற்றும் புதுக்கோட்டையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்! 250 நிறுவனங்களில் 10000 வேலைவாய்ப்புகள்!

தமிழ்நாடு வேலைவாய்ப்பு துறை சார்பில் நடத்தப்படும் தனியார்துறை வேலைவாய்ப்பு இணையதளம் வாயிலாக புதுக்கோட்டை மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் மெகா வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 8ம் வகுப்பு, நர்சிங், டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்த அனைவருக்கும் வேலை உள்ளன. நூற்றுக்கணக்கான தனியார் துறை நிறுவனங்கள் இந்த முகாமில் கலந்து கொள்ள உள்ளதாக அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.

Authored byசுபாஷ் சந்திர போஸ் | Samayam Tamil 6 Mar 2023, 5:59 pm

ஹைலைட்ஸ்:

  • புதுக்கோட்டை இளைஞர்களுக்கு மார்ச் 11 வேலைவாய்ப்பு முகம்!
  • தென்காசி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 4000 பேருக்கு வேலை!
  • 8வது படித்தவர் முதல் பட்டதாரிகள் வரை பங்கேற்கலாம்.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Private Job Fair 2023
தமிழகம் முழுவதும் மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு துறை இணைந்து பல்வேறு மாவட்டங்களில் தொடர்ச்சியாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி வருகின்றன. இந்த முகமாம்களில் தனியார் துறையை சேர்ந்த நிறுவனங்கள் கலந்து கொண்டு ஆயிரக்கணக்கான வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக புதுக்கோட்டை மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் வருகின்ற 11ம் தேதி மெகா வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 18 முதல் 40 வயதுள்ள இளைஞர்கள் இந்த முகாம்களில் கலந்து கொள்ளலாம்.
TNHRCE Jobs : பழனி முருகன் கோவிலில் 281 காலிப்பணியிடங்கள்! 11,000 முதல் 1 லட்சம் வரை சம்பளம்!
தேவையான கல்வித்தகுதிகள்:
இம்முகாமில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ. டிப்ளமோ, பி.இ. நர்சிங் படிப்புகள் உள்ளிட்ட பட்டதாரிகள் வரை தகுதியானவர்கள் கலந்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு முகாமிற்கு தேவையான சான்றிதழ்கள்:
  • சுயவிவர குறிப்பு (Resume)
  • கல்வி சான்றிதழ்கள்
  • ஆதார் கார்டு
  • முன்பதிவு நகல்

வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் இடம்:

தென்காசி : புளியங்குடி S.வீராசாமி செட்டியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் வருகிற 11.03.2023 அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைப்பெறும்.
புதுக்கோட்டை : புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரி வளாகத்தில் வருகிற 11.03.2023 அன்று காலை 9 மணி முதல் மதியம் 3 மணி முகாம் நடைப்பெறும்.
மகளிர் தினத்தில் பெண்களுக்கு மட்டும் விடுமுறை அளித்து அரசு அதிரடி உத்தரவு!
முன்பதிவு செய்வது எப்படி?
தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள முன்பதிவு அவசியம்.
STEP 1 : தனியார்துறை வேலைவாய்ப்பு இணையதளத்தில் உங்கள் ஐடி மற்றும் பாஸ்வோர்டை உள்ளீடு செய்து லாகின் செய்யவும்.
STEP 2 : தற்போது திறக்கும் டாஷ்போர்டில் Job Fair பட்டியலில் கிளிக் செய்யவும்.
STEP 3 : வேலைவாய்ப்பு முகாம் பட்டியலில் உங்கள் ஊர் எதுவோ அந்த முகாம் அறிவிப்பின் மீது கிளிக் செய்யவும்.
STEP 4 : பின், Apply என்ற பகுதியை கிளிக் செய்யவும்.
STEP 5 : உடனே உறுதிபடுத்தல் மெயில் உங்கள் மெயில் ஐடிக்கு வரும்.
STEP 6 : முகாமிற்கு முன்பதிவு செய்த தரவுகள் மற்றும் மேலே கூறப்பட்டுள்ள தேவையான சான்றுகளோடு செல்லவும்.

  • புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு முகாமின் அறிவிப்பை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
  • தென்காசி மாவட்ட அறிவிப்பை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
எழுத்தாளர் பற்றி
சுபாஷ் சந்திர போஸ்
சுபாஷ் கடந்த நான்கு வருடங்களாக ஊடகத்துறையின் முன்னணி டிஜிட்டல் தளங்களில் கான்டென்ட் எழுதுபவராகவும் மற்றும் செய்தி நிறுவனங்களில் கள நிருபராகவும் பணியாற்றிய அனுபவமுள்ளவர். இயல்பில் எந்த துறை சார்ந்து எழுதும் ஆர்வம் கொண்ட சுபாஷ் தற்போது கல்வி, ஆரோக்கியம், உறவுகள் குறித்து எழுதி வருகிறார். அரசியல் மற்றும் உறவுகள் குறித்த துறையில் ஆர்வம் மிக்கவர். அவர் ஒரு lepidopterist, bibliophile மற்றும் anthophile ஆவார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி