ஆர்.ஆர்.பி டெக்னீஷியன் பணிக்கான திறனறிவுத் தேர்வு வரும் 16ம் தேதி நடக்கவிருந்த நிலையில், தற்போது தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க இங்கு க்ளிக் செய்யவும்
ஆட்டோ லோக்கோ பைலட் மற்றும் டெக்னீஷியன் பணிகளுக்கான ஆட்களை தேர்ந்தெடுக்க முதல்கட்டத் தேர்வு கடந்த ஆகஸ்ட் 9, 2018 முதல் செப்டம்பர் 4, 2018 வரை நடந்தது. இரண்டாம் கட்ட தேர்வு கம்ப்யூட்டர் மூலம் ஜனவரி 21, 2019 முதல் ஜனவரி 23, 2019 வரை நடத்தப்பட்டது. இத்தேர்வில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக குறித்த நேரத்தில் தேர்வை தொடங்கவோ முடிக்கவோ முடியவில்லை என சிலருக்கு மட்டும் பிப்ரவரி 8ஆம் தேதி மறுத்தேர்வு நடத்தப்பட்டது. இந்நிலையில் இத்தேர்வுக்கான விடைத்தாள்கள் கடந்த மாதம் 18ஆம் தேதி வெளியாகின.
இதன் பிறகு ஏப்ரல் 16ம் தேதி திறனறிவுத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 16ம் தேதி நடக்கவிருந்த திறனறிவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஆர்.ஆர்.பி இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: ‘ரயில்வே லோகோ பைலட் பணிக்கான திறனறிவுத் தேர்வு ஏப்ரல் 16ம் அறிவிக்கப்பட்டிருந்தது. தவிர்க்க முடியாத சூழல்நிலை காரணமாக அந்த தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, ஏப்ரல் 16ம் தேதி திறனறிவுத் தேர்வு நடைபெறாது. தேர்வு நடக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்’ இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தேர்வில் நெகட்டிவ் மதிப்பெண்கள் எதுவும் கிடையாது என்பதால், தேர்வர்கள் எளிமையான முறையில் தேர்வு எழுதலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக குருப் சி மற்றும் டி பணியிடங்களை வரும் செப்டம்பர் மாதத்துகுள் நிரப்ப ரயில்வே அமைச்சகம் ரயில்வே தேர்வாணையத்துக்கு அறிவுறுத்தியிருந்தது. அதன்படி, ஆர்.ஆர்.பி. ஏ.பி.எல். டெக்னீஷியன் தேர்வு முடிவுகள், கட் ஆப் மதிப்பெண்கள் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. தேர்வு எழுதியவர்கள் தங்களுடைய மதிப்பெண்களை ஆர்ஆர்பி.,யின் அதிகார்ப்பூர்வ இணையதளமான http://rrbchennai.gov.in அல்லது http://www.rrbcdg.gov.in/ என்ற இணையதளத்துக்குச் சென்று தெரிந்து கொள்ளலாம்.
ஆங்கிலத்தில் படிக்க இங்கு க்ளிக் செய்யவும்
ஆட்டோ லோக்கோ பைலட் மற்றும் டெக்னீஷியன் பணிகளுக்கான ஆட்களை தேர்ந்தெடுக்க முதல்கட்டத் தேர்வு கடந்த ஆகஸ்ட் 9, 2018 முதல் செப்டம்பர் 4, 2018 வரை நடந்தது. இரண்டாம் கட்ட தேர்வு கம்ப்யூட்டர் மூலம் ஜனவரி 21, 2019 முதல் ஜனவரி 23, 2019 வரை நடத்தப்பட்டது. இத்தேர்வில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக குறித்த நேரத்தில் தேர்வை தொடங்கவோ முடிக்கவோ முடியவில்லை என சிலருக்கு மட்டும் பிப்ரவரி 8ஆம் தேதி மறுத்தேர்வு நடத்தப்பட்டது. இந்நிலையில் இத்தேர்வுக்கான விடைத்தாள்கள் கடந்த மாதம் 18ஆம் தேதி வெளியாகின.
இதன் பிறகு ஏப்ரல் 16ம் தேதி திறனறிவுத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 16ம் தேதி நடக்கவிருந்த திறனறிவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஆர்.ஆர்.பி இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: ‘ரயில்வே லோகோ பைலட் பணிக்கான திறனறிவுத் தேர்வு ஏப்ரல் 16ம் அறிவிக்கப்பட்டிருந்தது. தவிர்க்க முடியாத சூழல்நிலை காரணமாக அந்த தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, ஏப்ரல் 16ம் தேதி திறனறிவுத் தேர்வு நடைபெறாது. தேர்வு நடக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்’ இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தேர்வில் நெகட்டிவ் மதிப்பெண்கள் எதுவும் கிடையாது என்பதால், தேர்வர்கள் எளிமையான முறையில் தேர்வு எழுதலாம் என்பது குறிப்பிடத்தக்கது.