ஆப்நகரம்

TN Nurse Notification: 2,345 செவிலியர் காலிப் பணியிடங்கள்; உடனே விண்ணப்பிக்கவும்!

தமிழகத்தில் காலியாகவுள்ள செவிலியர் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

TIMESOFINDIA.COM 11 Feb 2019, 1:58 pm
தமிழ்நாடு மருத்துவச் சேவை வேலைவாய்ப்பு ஆணையம்(TN MRB) முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களுக்கு உடனே விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக mrb.tn.gov.in என்ற இணையதளத்தை அணுகலாம்.
Samayam Tamil Nurse


இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், 2,345 செவிலியர் பணியிடங்கள் காலியாக இருப்பது தெரியவந்துள்ளது. தகுதியான நபர்கள் சம்பந்தப்பட்ட இணையதளத்தில் ஆன்லைனில் உடனே விண்ணப்பிக்கவும் என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கான கடைசி நாள் பிப்ரவரி 27, 2019 ஆகும். விண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசி நாள் மார்ச் 1, 2019 ஆகும்.

செவிலியர் பணிக்கான போட்டித் தேர்வு வரும் ஜூன் 23, 2019ல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் நர்சிங்கில் டிகிரி அல்லது டிப்ளமோ படித்திருக்க வேண்டும்

வயது

18 முதல் 57 வரை இருக்க வேண்டும்

கட்டணம்

பொதுப்பிரிவைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.700ம், தாழ்த்தப்பட்ட/பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களுக்கு ரூ.350ம் கட்டணம்

சம்பள விவரம்

பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதச் சம்பளமாக ரூ.14,000 மற்றும் வருடாந்திர சம்பள உயர்வு ரூ.500

அடுத்த செய்தி