ஆப்நகரம்

படிக்கும் போது சோம்பலில் இருந்து மீள்வது எப்படி?

சோம்பலில் இருந்து வெளியேறுவது எப்படி என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

Samayam Tamil 26 Mar 2020, 9:15 pm
காலையில் வைத்த அலாரத்தை ‘Snooze’ செய்யும் போதே, நாம் சோம்பலில் விழுந்து விடுகிறோம். இப்போது பெரும்பாலோனார் சோம்பேறித்தனத்தால், பல்வேறு நல்ல விஷயங்களை, வாய்ப்புகளை இழந்து விடுகின்றனர். இருப்பினும், சிலர் சோம்பலில் இருந்து வெளியே வர வேண்டும் என்று எண்ணுவார்கள். ஆனால், எப்படி மீள்வது என்று தெரியாமல் இருக்கும். அந்த வகையில், சோம்பலில் இருந்து வெளியேறுவது எப்படி என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
Samayam Tamil things you should know that how to avoid laziness while studying
படிக்கும் போது சோம்பலில் இருந்து மீள்வது எப்படி?




1. முதலில் முயற்சி செய்யுங்கள்:

‘முயற்சி திருவிணையாக்கும்’ என்பது போல், முதலில் முயற்சி செய்ய வேண்டும். முயற்சி செய்பவர்களுக்கு செல்வமும், வாய்ப்பும் அதிகம் கிடைக்கும். முயற்சி செய்யாதவர்களுக்கு, வரக்கூடிய வாய்ப்பும் கிடைக்காமல் போகும்.


எனவே, முதலில் சோம்பலில் இருந்து வெளியே வருவதற்கு முயற்சி செய்யுங்கள். சோம்பலில் இருந்து வெளியே வருவேன் என்று எண்ணுங்கள். அப்போது தான் எண்ணங்கள் செயலுக்கு வரும். காலையில் சீக்கரம் எழ வேண்டும் என்று முதல் நாள் இரவில் எண்ணுங்கள். காலையில் உங்களை அறியாமலே சீக்கரம் எழுவீர்கள்.

3. சோம்பல் எண்ணங்களுக்கு சிறிதும் இடம் கொடுக்காதீர்.

சோம்பலான எண்ணங்களுக்கு கொஞ்சம் கூட இடம் கொடுத்து விடக் கூடாது. சோம்பலுக்கு பழகிய மனம், மீண்டும் மீண்டும் சோம்பலை தான் விரும்பும். காலையில் எழுந்து விடுவீர்கள். ஆனால், அடுத்த சில நொடிகளிலே, இன்னும் சிறிது நேரம் தூங்கினால் நன்றாக இருக்கும் என்ற எண்ணங்கள் வரும்.


பெரும்பாலோனாருக்கு இந்த பிரச்னை உண்டு. அதிகாலை எழுவதும், எழுந்த சில நொடிகளிலே மீண்டும் உறங்கி விடுவார்கள். எனவே, அதிகாலை எழுந்த உடனையே, உடற்பயிற்சி செய்யுங்கள். அப்போது தான் சோம்பலை முறியடிக்க முடியும்.

2. சிறிது நாள் சிரமப்படுங்கள்

அதிகாலை 4 மணிக்கு எழுந்து பாருங்கள். அன்று முழுவதும் உங்களுக்கு அதிக நேரம் கிடைக்கும். இதன் மூலம் வாழ்வில் முன்னேறுவதற்கு அதிக வாய்ப்புகளும், வசதியும் எளிதாக பெற முடியும். ஆரம்பத்தில் காலையில் எழுவதற்கு சிறிது சிரமமாக இருக்கலாம். ஆனால், தொடர்ந்து 3 நாட்கள் அதிகாலை எழுந்து பாருங்கள்.


அதிகாலை சீக்கரம் எழுந்ததும் ஒரு அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்யுங்கள். அப்போது தான் உடலும், மனமும் புத்துயிர் பெறும். அதற்கு பிறகு உங்களுடைய செயல்களை தொடங்குங்கள்.

அடுத்த செய்தி