ஆப்நகரம்

TNPSC தேர்வுகள் ஒத்திவைப்பு!

சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறுவதை ஒட்டி டி.என்.பி.எஸ்.சி அறிவித்த அருங்காட்சியக அலுவலருக்கான தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 13 May 2019, 7:06 pm
சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறுவதை ஒட்டி டி.என்.பி.எஸ்.சி அறிவித்த அருங்காட்சியக அலுவலருக்கான தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
Samayam Tamil tnpsc office


தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் Curator in Museum Department தேர்வை வருகின்ற 19.05.2019 அன்று நடத்துவதாக அறிவிக்கை வெளியிட்டிருந்தது. இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையம், சட்டமன்றத்துக்கான இடைத்தேர்தலை வருகின்ற 19.05.2019 அன்று அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம் மற்றும் ஒட்டப்பிடாரம் ஆகிய நான்கு தொகுதிகளில் நடத்துவதாக அறிவித்துள்ளது.
இத்தேர்தலை கருத்தில் கொண்டும், ஒரு சில நிர்வாக காரணங்களுக்காகவும் 19.05.2019 பி.ப/முப அன்று நடைபெறவிருக்கும் Curator in Museum Department எழுத்து தேர்வை 25.05.2019 பி.ப/மு.ப அன்று நடத்த தேர்வாணையம் முடிவு செய்துள்ளது. இத்தேர்வு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த சென்னை, மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய 3 தேர்வு மையங்களில் நடைபெறும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி