ஆப்நகரம்

டி.என்.பி.எஸ்.சி செயல் அலுவலர் பணிக்கான எழுத்துத் தேர்வு தேதி மாற்றம்

செயல் அலுவலர் பணிக்கான எழுத்துத் தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.

Samayam Tamil 8 Mar 2017, 9:28 am
சென்னை : செயல் அலுவலர் பணிக்கான எழுத்துத் தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.
Samayam Tamil tnpsc executive officer grade iv exam date changed
டி.என்.பி.எஸ்.சி செயல் அலுவலர் பணிக்கான எழுத்துத் தேர்வு தேதி மாற்றம்



டிஎன்பிஎஸ்சி செயல் அலுவலர் நிலை - III, நிலை - IV ஆகிய பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு ஏப்ரல் மாதம் 29, 30 ஆகிய தேதிகளில் நடைப்பெறவுள்ளது. இந்த தேர்வு நடைப்பெறும் தேதிகளில் ஆசிரியர் தகுதி தேர்வு நடைப்பெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது.

இந்த தேர்வுக்கும் , ஆசிரியர் தகுதி தேர்வுக்கும் விண்ணபத்தவர்வகள் ஏராளமானோர் இருப்பதால் விண்ணப்பதாரர்களின் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு, செயல் அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு தேதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

இதனடிப்படையில் விடுதிக் கண்காணிப்பாளர், உடற்பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு மே 20 -இல் நடைபெறும். செயல் அலுவலர் நிலை III, -பணிக்கான தேர்வு ஜூன் 10-ம் தேதியும், செயல் அலுவலர் நிலை IV, -பணிக்கான தேர்வு ஜூன் 10-ம் தேதியும் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

tnpsc executive officer grade-iv exam date changed

அடுத்த செய்தி