ஆப்நகரம்

குரூப் 2 தேர்வில் தவறான கேள்விகளுக்கு 9 கருணை மதிப்பெண்கள்; டி.என்.பி.எஸ்.சி உத்தரவு!

சென்னை: குரூப் 2 தேர்வில் தவறான கேள்விகளுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கி டி.என்.பி.எஸ்.சி உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 22 Nov 2018, 6:58 pm
தமிழக அரசின் வேலைவாய்ப்புத் துறை இளநிலை அலுவலர், சார் பதிவாளர், வருவாய்த் துறை உதவியாளர், தொழிலாளர் உதவி ஆய்வாளர், நகராட்சி ஆணையாளர், உதவிப் பிரிவு அலுவலர் உள்ளிட்ட பணிகளுக்கு 1,199 காலியிடங்கள் இருக்கின்றன.
Samayam Tamil TNPSC


இதற்கான குரூப் 2 போட்டித் தேர்வு கடந்த 11ஆம் தேதி நடைபெற்றது. இதற்காக 2,268 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. இந்த தேர்வை 6,26,726 பேர் எழுதினர். அவர்களில் 3,54,245 பேர் பெண்கள்.

2,72,462 பேர் ஆண்கள். 10 பேர் மூன்றாம் பாலினத்தவர். இந்த தேர்வில் திருச்செங்கோடு ஆசிரமத்தை நிறுவியர் யார் என்று கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அதற்கு இ.வெ.ராமசாமி நாயக்கர், காந்திஜி, ராஜாஜி, சி.என்.அண்ணாதுரை என பதில்கள் இருந்தன.

தந்தை பெரியாரின் பெயர் தவறாகவும், சாதி அடையாளத்துடனும் இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதேபோல் 6 கேள்விகளுக்கு தவறான விடைகள் இடம்பெற்றுள்ளன.

இதற்கு 9 கருணை மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி செயலாளர் நந்தகுமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தேர்வு எழுதியவர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி