ஆப்நகரம்

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர் எண்ணிக்கை 68 லட்சத்தை நெருங்கியது!

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோரின் எண்ணிக்கை 67 லட்சத்தை தாண்டியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது

Samayam Tamil 23 Nov 2019, 6:43 pm
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு, பள்ளி, கல்லூரிப்படிப்பு முடித்து வெளியேறுபவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர். அவ்வாறு பதிவு செய்தோர், ஒவ்வொரு காலக்கட்டத்திலும், தங்களுடைய வேலைவாய்ப்பு பதிவை புதுப்பித்தும் வருகின்றனர்.
Samayam Tamil TN Employment Office


இந்த நிலையில், தற்போது வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மொத்தம் எத்தனை பேர் பதிவு செய்துள்ளனர் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி நிலவரப்படி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பதிவுதாரர்கள் பற்றிய விபரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Also Read This: இந்த வார வேலைவாய்ப்பு செய்திகள்! நவ. 23-29 வரை

அதன் அடிப்படையில், மொத்தம் 67 லட்சத்து 97 ஆயிரத்து 634 பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். இதில் 18 லட்சத்து 66 ஆயிரத்து 451 பேர் 18 வயதுக்கு உட்பட்டவர்கள். கல்லூரி படிப்பு முடித்தவர்கள் 12,39,867 பேர் ஆவார்கள். 25,47,802 பேர் 35 வயது வரையில் உள்ளவர்களும், 11,35,866 பேர் 57 வயது வரையில் உள்ள பதிவுதாரர்களும் ஆவர். எல்லாவற்றுக்கும் மேலாக, 58 வயதுக்கு மேல் உள்ளவர்கள் எண்ணிக்கை 7 ஆயிரத்து 648 பேர் உள்ளனர்.

ஒட்டு மொத்தமாக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு காத்திருப்பவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 68 லட்சம் வரையில் உள்ளது. இதில் சுமார் 1 லட்சத்து 231 ஆயிரத்து 179 மாற்றுத்திறனாளிகளும் உள்ளனர்.

வ. எண்பதிவுதாரர்கள் வகைஎண்ணிக்கை
1பள்ளி மாணவர்கள்18,66,451
2கல்லூரி மாணவர்கள்12,39,867
335 வயதுக்கு உட்பட்டவர்கள்25,45,802
457 வயதுக்கு உட்பட்டவர்கள்11,35,866
558 வயதுக்கு மேற்பட்டவர்கள்7,648
6மாற்றுத்திறனாளிகள்1,31,179


மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் மாபெரும் வேலைவாய்ப்பு! 1,508 காலியிடங்கள்!!

அடுத்த செய்தி