ஆப்நகரம்

திருவள்ளூரில் கால்நடை பராமரிப்பு துறை நேர்முகத் தேர்வுகள் தள்ளி வைப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில், கால்நடை பராமரிப்பு துறையில் இன்று நடக்கவிருந்த நேர்முக தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

TNN 15 May 2017, 12:41 pm
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில், கால்நடை பராமரிப்பு துறையில் இன்று நடக்கவிருந்த நேர்முக தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
Samayam Tamil veterinary care department interview postponed in thiruvallur
திருவள்ளூரில் கால்நடை பராமரிப்பு துறை நேர்முகத் தேர்வுகள் தள்ளி வைப்பு


தமிழகம் முழுவதும் கால்நடைபராமரிப்பு துறையில் உதவியாளர் பணிக்கான தேர்வு கடந்த 10-ம் தேதி முதல் வருகிற 17-ம் தேதி வரை 7 நாட்கள் நடைபெறுகின்றது. அனைத்து தேர்வு மாவட்டங்களிலும் இந்த நேர்காணல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில், கால்நடை பராமரிப்பு துறையில் இன்று நடக்கவிருந்த நேர்முக தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள் வருகிற வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் நடக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் தேர்வு​கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
Veterinary Care Department interview postponed in Thiruvallur

அடுத்த செய்தி